செய்திகள் :

BJP: 'வெளியான பாஜக நிர்வாகிகள் பட்டியல்' - கைவிடப்பட்டாரா விஜயதரணி?

post image

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். அதில் நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் மாநிலத் துணைத் தலைவர்களாகவும், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 15 பேர் மாநிலச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருந்த விஜயதரணியின் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்த விஜயதரணிக்கு எந்தப் பதவியும் கிடைக்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொதிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமூர்த்தி பவன்

நிறைவேறாத கோரிக்கைகளும், பா.ஜ.க. நோக்கிய பயணமும்

விஜயதரணி தனது மாணவப் பருவத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். அவருக்கு மாநில அரசியலைவிட டெல்லி அரசியலில் தான் அதிக நாட்டம் இருந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் மூலமாக டெல்லி லாபியில் ஈடுபட்டு வந்தார். அதன் காரணமாகக் கடும் எதிர்ப்பு இருந்தபோதும் மூன்று முறை எம்.எல்.ஏ. சீட்டைப் பெற்றார். ஒருகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி அல்லது சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குக் காய்களை நகர்த்தினார்.

இந்தச் சூழலில்தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு, செல்வப்பெருந்தகையின் அரசியல் செல்வாக்கு ஓங்கியது. இதனால் அவருக்கு மாநிலத் தலைவர் பதவி கிடைத்தது. அதேபோல், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜேஷ்குமாருக்குப் பெற்றுத் தந்தார் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவிகளைப் பிடிக்கக் கடும் முயற்சி மேற்கொண்ட விஜயதரணிக்கு இந்த நிகழ்வுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்தன.

நயினார் நாகேந்திரன், அண்ணாமலை

இறுதியாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட எம்.பி. சீட் கேட்டார் விஜயதரணி. ஆனால், அவர் எம்.எல்.ஏ.வாக இருப்பதைக் காரணம் காட்டி கட்சித் தலைமை கைவிரித்துவிட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த விஜயதரணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியது பா.ஜ.க. அப்போது, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட சீட் அல்லது ராஜ்யசபா சீட் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இந்தக் கோரிக்கைக்கு அப்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பு சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதை அடுத்தே விஜயதரணி பா.ஜ.க.வில் இணைந்தார்.

நீடித்த காத்திருப்பும் பகிரங்க ஆதங்கமும்

பா.ஜ.க-வில் இணைந்த பிறகும் கூட விஜயதரணியின் அரசியல் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போது டெல்லி சென்ற பொன்.ராதாகிருஷ்ணன், "கட்சிக்காக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். கடந்த முறை எனக்குத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டதால் மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதாக நீங்கள் சொன்னது நடக்கவில்லை. கவர்னர் பதவியை எதிர்பார்த்தேன். அதுவும் கிடைக்கவில்லை" என வருத்தமாகப் பேசியதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கு மீண்டும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் சீட் வழங்கப்பட்டது. அதேநேரத்தில், குமரியில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக முதலில் அழைத்துச் சென்ற அண்ணாமலை தரப்பு பின்னர் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது.

கமலாலயம்!

இதில் கடுப்பான விஜயதரணி, ஒரு பா.ஜ.க. நிகழ்ச்சியிலேயே தனது வருத்தத்தைப் பகிரங்கமாகப் போட்டுடைத்தார். "சில விஷயங்கள் என்னை கவர்ந்ததால் மட்டுமே நான் அதில் ஈடுபடுவேன். மூன்று முறை எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். இன்னும் இரண்டரை ஆண்டுகள் பாக்கி இருக்கும் நிலையில், அதை விட்டுவிட்டு பா.ஜ.க.வில் இருக்க வேண்டும் என வந்திருக்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேல்லாம் வரவில்லை. எதிர்பார்ப்போடுதான் வந்திருக்கிறேன்.

எல்லோரும் அப்படி நினைத்துக்கொண்டீர்கள் என்றால் தவறு. நன்றாக உழைக்க வேண்டும். கட்சியை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும். அதற்கு என்ன தேவை? ஏதாவது ஒரு பதவி தேவை. 6 மாதம் ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள். பேசி ஏதாவது நல்லது செய்வீர்கள். அண்ணாமலை கூட, 'அக்கா உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கட்சி உங்களை சரியாகப் பயன்படுத்தும்' எனச் சொல்லி வருகிறார். எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது" என்று பேசினார். ஆனாலும் அவருக்கு எந்தப் பதவியும் கிடைக்கவில்லை.

விஜயதரணி

எதிர்காலம் என்ன?

மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் வந்த பிறகு தனக்கு ஏதாவது பதவி கிடைக்கும் என விஜயதரணி எதிர்பார்த்தார். ஆனால், இப்போது வெளியான பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஒரு ஆண்டுக்கும் மேலாகியும் தனக்குப் பதவி கிடைக்காததால் அவர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

அதேநேரத்தில், விஜயதரணிக்கு நெருக்கமானவர்கள், "மகளிருக்கான பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. அதில் அக்காவுக்கு உறுதியாக வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று தெரிவித்தனர். விஜயதரணியின் அரசியல் எதிர்காலம் மற்றும் அவரது அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பா.ஜ.க.வில் அவரது காத்திருப்பு தொடருமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சென்னை: 12.80 லட்சம் பயணிகள் பயணம்; ரூ.90 லட்சம் சேமிப்பு-லாபம் தரும் மின்சார பேருந்துகள்

சென்​னை​யில் மின்சா​ரப் பேருந்​துகள் மூலம் எரிபொருள் செலவு ரூ.90 லட்​சம் சேமிக்​கப்​பட்​டிருக்கிறது. கடந்த மாதம் 30 ஆம் தேதி சென்னையில் 120 மின்​சா​ரப் பேருந்​துகளின் சேவையை முதல்​கட்​ட​மாக முதலைச்சர்... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: "சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதற்கு அதிமுக-வின் அழுத்தம்தான் காரணம்"- இபிஎஸ்

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சட்டவிரோத காவலில் கொலை செய்யப்பட்ட மடப்புரம் அஜித்குமார் வீட்டுக்கு இன்று (ஜூலை 30) சென... மேலும் பார்க்க

நெல்லை: திருடிய நகையை மீண்டும் வீட்டில் வைத்த திருடன்.. என்ன காரணம்?

வீட்டிலிருந்து திருடிச் சென்ற நகையை மீண்டும் அதே வீட்டுக்குள் திருடன் வைத்து சென்ற ஆச்சர்ய சம்பவம்ஆண்டுதோறும் எதோவொரு மாவட்டத்தில் நடந்துகொண்டேதான் இதுக்கிறது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ரம்மதப... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டுடன் வர்த்தக உறவை மேம்படுத்திக்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்!' - சென்னையில் பெரு தூதர்

தென் அமெரிக்க நாடான பெரு தன் 204-வது விடுதலை நாளை கொண்டாடி வருகிறது. இந்த நேரத்தில் பெரு நாட்டின் சுதந்திர தினம் சென்னையிலும் கொண்டாடப்பட்டது.சுரங்கம், ஆட்டோமொபைல், தகவல் தொடர்பு துறை, விவசாயம் ஆகிய த... மேலும் பார்க்க

`இதில் அரசியல் இல்லை..!’ - பிரதமர் மோடி நிகழ்சியில் திருமாவளவன் பங்கேற்றது குறித்து வன்னிஅரசு

இரண்டுநாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்த மோடி, சனிக்கிழமை துத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்தார். நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழனின் ப... மேலும் பார்க்க

Top News : பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட் டு முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் | ஜூலை 27 ரவுண்ட்அப்

இன்றைய நாளின் (ஜூலை 27) முக்கியச் செய்திகள்!பீகாரில் ஊர்க்காவல் படை தேர்வில் கலந்துக்கொண்டப் பெண் ஒருவர் மயங்கிய நிலையில், அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது கூட்டு பாலியல் வன்கொடு... மேலும் பார்க்க