செய்திகள் :

நமஸ்தே டிரம்ப், நம் பக்கம் டிரம்ப் என்றீர்களே? இதுதான் அந்த வெகுமதியா? மோடிக்கு கார்கே கேள்வி

post image

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டையை நிறுத்தியது தான்தான் என டிரம்ப் கூறிவருவது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌன விரதத்தையே கடைப்பிடித்ததாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

சண்டை நிறுத்தம் குறித்து டிரம்ப்பின் பேச்சுக்கு, நாடாளுமன்றத்தில் மோடி மௌன விரதத்தைக் கடைப்பிடித்தார். இன்னமும் இந்தியா மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை டிரம்ப் எழுப்பு வருகிறாரே, ஆனாலும் மோடி மௌனமாகவே இருப்பதா? நரேந்திர மோடி, நாடுதான் நமக்கு முக்கியம், நாம் அனைவரும் நாட்டுடன்தான் இருக்கிறோம் என்று கார்கே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், டிரம்ப் அறிவித்திருக்கும் 25 சதவீத வரி விதிப்பு இந்திய வர்த்தகத்தையும், சிறு, குறு தொழில்களையும், விவசாயிகளையும் அதிகம் பாதிக்கும். இதுதான் உங்கள் நண்பர், நமஸ்தே டிரம்ப், நமது பக்கம் டிரம்ப் அரசு என்று சொன்னதற்கு எல்லாம், உங்கள் நண்பர், நமது நாட்டுக்கு அளிக்கும் வெகுமதியா? என்று கேட்டுள்ளார் கார்கே.

புதிய விதிமுறை அமல்! ஜிபே, போன்பே பயனர்கள் கவனத்துக்கு...

ஜிபே, போன் பே போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.கடந்த ஏப்தல் - மே மாதங்களில் டிஜிட்டல் பணப்... மேலும் பார்க்க

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரியாவு உருளை விலை ரூ.1,789 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வா்த்தக சமையல் எரியாவு உருளை ஒன்றின் விலை ர... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஆன்லைன் ரம்மி விளையாடிய சர்ச்சையில் சிக்கிய அமைச்சா் மாணிக்ராவ் கோகடே, வேளாண் துறையில் இருந்து விளையாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.மகாராஷ்டிர சட்டப்பேரவை... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமா் ஆலோசனை

ஐக்கிய அரபு அமீரக அதிபா் முகமது பின் சையது அல் நஹ்யானுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வழியில் வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளி... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் மீண்டும் முடக்கம் - பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் மீண்டும் முடங்கின.நாடாளுமன்ற மழைக்... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டட பரப்பளவுக்கு ஏற்ப வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கை - சிபிஎஸ்இ விதிகளில் திருத்தம்

பள்ளிகளின் மொத்த நில அளவுக்கு பதிலாக கட்டட பரப்பளவின் அடிப்படையில் வகுப்புப் பிரிவுகளின் (செக்ஷன்) அதிகபட்ச எண்ணிக்கையை அனுமதிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது மத்திய இடைநிலைக் க... மேலும் பார்க்க