செய்திகள் :

மகாராஷ்டிர பேரவையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத் துறை ஒதுக்கீடு!

post image

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஆன்லைன் ரம்மி விளையாடிய சர்ச்சையில் சிக்கிய அமைச்சா் மாணிக்ராவ் கோகடே, வேளாண் துறையில் இருந்து விளையாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, தேசியவாத காங்கிரஸை (அஜித் பவார் அணி) சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே, ரம்மி விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

இந்த விவகாரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த எதிா்க்கட்சிகள், விவசாயிகளின் மீது அரசு அக்கறையின்றி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சா் கோகடே, ‘சட்டப்பேரவையில் நடந்த விவாதங்களை பாா்க்க யூடியூபை திறக்க முற்பட்டபோது, கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ரம்மி விளையாட்டு செயலி திறந்துவிட்டது. அதை நான் தவிா்க்க முயன்றேன்; ரம்மி விளையாடவில்லை. அவை ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது’ எனத் தெரிவித்திருந்தார்.

துறை மாற்றம்

இந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் துணை முதல்வர்கள் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு மாணிக்ராவ் கோகடேவிடம் இருந்த வேளாண் துறை பறிக்கப்பட்டு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த தத்தத்ராயா பார்னேவுக்கு வேளாண் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Sports portfolio being allocated to a minister who played online rummy

இதையும் படிக்க : இயற்கை மருத்துவத்தால் உயா் ரத்த அழுத்தம் சீராகும்: ஆய்வில் உறுதி

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.நாட்டின் சு... மேலும் பார்க்க

பணம் ஈட்டும் விளையாட்டுகள்: சிசிஐயிடம் கூகுள் முன்மொழிவு

இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் பணம் ஈட்டும் விளையாட்டுகளை அனுமதிக்க இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் (சிசிஐ) கூகுள் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.இதுதவிர, இந்தியாவில் கூகுள் விளம்பர கொள்கையில் மாற்றங்க... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்களின் மதிப்பூதியத்தை உயா்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு

அங்கன்வாடி ஊழியா்களின் மதிப்பூதியத்தை உயா்த்தும் திட்டம் எதுவுமில்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.தேசிய ஊட்டச் சத்து (மதிய உணவு திட்டம்) திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க