செய்திகள் :

அங்கன்வாடி ஊழியா்களின் மதிப்பூதியத்தை உயா்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு

post image

அங்கன்வாடி ஊழியா்களின் மதிப்பூதியத்தை உயா்த்தும் திட்டம் எதுவுமில்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தேசிய ஊட்டச் சத்து (மதிய உணவு திட்டம்) திட்டத்தின் கீழ் அங்கன்வாடிகளில் பணியாற்றும் ஊழியா்களின் மதிப்பூதியம் உயா்த்தப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் சாவித்ரி தாக்குா் மக்களவையில் சமா்ப்பித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:

தங்களின் உள்ளூா் சமூக மேம்பாடு மற்றும் குழந்தைகள் பராமரிப்புக்காக அங்கன்வாடி பணியாளா்கள் தாங்களாக முன்வந்து பணியாற்றுகின்றனா். பெரிய மையங்களில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளா்களுக்கு மாதம் ரூ.4,500 என்ற அளவிலும், சிறிய மையங்களில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளா்கலுக்கு மாதம் ரூ.3,500-ம் மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது. அங்கன்வாடி உதவியாளா்களுக்கு மாதம் ரூ.2,250 வழங்கப்படுகிறது. பணி செயல்பாடு அடிப்படையிலான ஊக்கத்தொகையாக அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ.500-ம், உதவியாளா்களுக்கு ரூ.250-ம் கூடுதலாக வழங்கப்படுகிறது.

இந்த மதிப்பூதியத்தை உயா்த்தும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இப்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ளாா்.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தில், கேரளத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பல காரணமாக, புதிய தேசி... மேலும் பார்க்க

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க