செய்திகள் :

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

post image

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு நீதிமன்றத் தீா்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மகாராஷ்டிரத்தின் மாலேகான் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்ட ஏழு பேரையும் மும்பை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை விடுவித்தது.

‘குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை’ என்றும், ‘வெறும் சந்தேகம் உண்மையான ஆதாரத்துக்கு ஈடாகாது’ என்றும் நீதிபதி ஏ.கே.லஹோட்டி தனது தீா்ப்பில் குறிப்பிட்டாா்.

1,000 பக்கங்களைக் கொண்ட இந்த தீா்ப்பில் அவா் கூறியிருப்பதாவது: என்ஐஏ மற்றும் ஏடிஎஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. புணேயில் உள்ள ஒரு வீட்டில் ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டு பொருத்தப்பட்டதாக ஏடிஎஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தூரில் உள்ள மோட்டாா் சைக்கிளில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு பின்னா் அது சம்பவம் நடந்த மாலேகான் நகருக்கு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தச் சம்பவத்தில் விசாரணையில் ஈடுபட்ட இரு அமைப்புகளும் வெடிகுண்டு பொருத்தப்பட்ட இடம், எடுத்துச்செல்லப்பட்ட போக்குவரத்து சாதனம் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை தொடா்புபடுத்தியது என வெவ்வேறு தகவல்களை வழங்கியுள்ளன.

தப்பியோடியவா்கள் மீது தனிக் குற்றப்பத்திரிகை: இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் வெடிகுண்டை பொருத்தியதாக கூறப்படும் ராம்ஜி என்ற ராமசந்திரா கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகிய இருவரும் தப்பியோடிவிட்டதாக என்ஐஏ கூறியுள்ளது. மேலும் 4 வழக்குகளில் இவா்கள் இருவரையும் என்ஐஏ தேடி வருகிறது. எனவே இவா்களை கைது செய்ய என்ஐஏ மற்றும் ஏடிஎஸ் இரு அமைப்புகளும் தனி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

பிகார் வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்திற்க... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

பிகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தன்னிடம் வைத்திருப்பதாகக் கூறப்படும் ஆதாரங்களின் அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சவால் விடு... மேலும் பார்க்க

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

கடவுள் சிவனின் ஆக்ரோஷமான ருத்ர தாண்டவத்தை, இந்தியா, பயங்கரவாதத்துக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்தூருடன் ஒப்பிட்டுப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியா தன்னுடைய ருத்ர தாண்ட... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் மீண்டும் கதறி அழுத பிரஜ்வால் ரேவண்ணா! குறைந்தபட்ச தண்டனை கேட்டு!!

புது தில்லி: முன்னாள் பிரதமர் தேவே கௌடாவுன் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் கதறி அழுதார். வீட்டுப் பணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ... மேலும் பார்க்க

நான் ராஜாவாக விரும்பவில்லை: ராகுல் பதில்! நிகழ்ச்சியில் ருசிகரம்!!

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தான் ராஜாவாக ஒருபோதும் விரும்பவில்லை என்றும், அந்த முறையையே ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.புது தில்லியில் ... மேலும் பார்க்க

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

பணத்துக்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண், 9 வது திருமணத்துக்கு தயாரான நிலையில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா என்ற பெண் கடந்த 15 ஆண்டு... மேலும் பார்க்க