செய்திகள் :

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

post image

இந்திய வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜோ ரூட்டை வம்பிழுத்தது தங்களது திட்டங்களுல் ஒன்றாக இருந்தது எனக் கூறியுள்ளார்.

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட்டில் வென்று தொடரை சமம்செய்ய இந்தியா முனைப்புடன் இருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 224க்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 247க்கு ஆட்டமிழந்தது. தற்போது, இந்திய அணி 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிக்ஸில் நல்ல நிலையில் இருந்தும் சொதப்பியது.

இந்தப் போட்டியில் ஜோ ரூட்டிடம் பிரசித் கிருஷ்ணா 22ஆவது ஓவரில் வம்பிழுத்துக் கொண்டே இருந்ததால் நடுவர் தலையிடும்படி ஆனது. பின்னர் ரூட் விரைவில் ஆட்டமிழந்தார்.

இது குறித்து பிரசித் கிருஷ்ணா கூறியதாவது:

இது சிறிய விஷயம்தான். எங்களுக்கு உள்ளாக இருக்கும் போட்டி மனப்பான்மை வெளியே வந்தது அவ்வளவுதான். களத்துக்கு வெளியே நாங்கள் நல்ல நண்பர்கள். இந்த மோதலை நாங்கள் இருவருமே மகிழ்ச்சியாக எதிர்கொண்டோம்.

ஜோ ரூட்டை வம்பிழுப்பது எங்களது திட்டத்திலே இருந்தது. ஆனால், நான் பேசியதற்கு அவர் அப்படி எதிர்வினை ஆற்றுவாரென நினைக்கவில்லை.

எனக்கு அவரை எப்போதும் பிடிக்கும். அவர் கிரிக்கெட்டின் ஒரு லெஜெண்ட் என்றார்.

India pacer Prasidh Krishna relished the banter with good mate' Joe Root on day two of the fifth and final Test and said riling up England's batting mainstay was part of the team's plans.

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்... மேலும் பார்க்க

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

இந்திய சுழல்பந்து வீச்சாளர் சஹால் விவாகரத்து குறித்து பேசும்போது தான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை எனக் கூறியுள்ளார். சஹாலுக்கும் தனஸ்ரீ வர்மாவுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் தொடர்பான சர்ச்சை எழுந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ப... மேலும் பார்க்க

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

ஆப்கன் வீரர் உஸ்மான் கனி ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் இசிஎஸ் டி10 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணியும் கில்ட்ஃபோர்டு அணியும் மோ... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்: வேகப் பந்துவீச்சாளர்கள் அசத்தல்; 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில்... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை படைத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 31) தொடங்கிய... மேலும் பார்க்க