செய்திகள் :

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

post image

ஆப்கன் வீரர் உஸ்மான் கனி ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் இசிஎஸ் டி10 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணியும் கில்ட்ஃபோர்டு அணியும் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 226 ரன்கள் எடுத்தது.

இதில் இந்த அணியில் கேபட்ன் உஸ்மான் கனி 43 பந்தில் 153 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரி, 17 சிக்ஸர்கள் அடங்கும்.

கில்ட்ஃபோர்டு பந்து வீச்சாளர் வில் எர்னியின் வீசிய ஒரே ஓவரில் 45 ரன்களை எடுத்து உஸ்மான் கனி பெரும் சேதத்தை ஏற்படுத்தினார்.

ஒரே ஓவரில் 6+ நோ பால், 6, 4+ வைட், 6, 4+ நோ பால், 6, 0, 6, 4 என மொத்தம் 45 ரன்கள் எடுத்தார்.

The Afghanistan batter smashed 45 runs off Will Arney in a single over
உஸ்மான் கனி

அடுத்து விளையாடிய கில்ட்ஃபோர்டு அணி 155/4 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஆஸ்கர் மிகைல் 47, டோமனிக் 33 ரன்கள் எடுத்தார்கள்.

இந்தப் போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணி வென்றது.

உஸ்மான் கனி (28 வயது) ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Afghan player Usman Ghani has set a world record by scoring 45 runs in an over.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில... மேலும் பார்க்க

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 21 ரன்களில் டெஸ்ட் போட்டிகளில் மிகப் பெரிய சாதனை படைப்பதை தவறவிட்டுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில... மேலும் பார்க்க

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்... மேலும் பார்க்க

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

இந்திய சுழல்பந்து வீச்சாளர் சஹால் விவாகரத்து குறித்து பேசும்போது தான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை எனக் கூறியுள்ளார். சஹாலுக்கும் தனஸ்ரீ வர்மாவுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர... மேலும் பார்க்க

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் தொடர்பான சர்ச்சை எழுந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் ப... மேலும் பார்க்க

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

இந்திய வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜோ ரூட்டை வம்பிழுத்தது தங்களது திட்டங்களுல் ஒன்றாக இருந்தது எனக் கூறியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. க... மேலும் பார்க்க