செய்திகள் :

மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கு: "யோகி ஆதித்யநாத் பெயரைச் சொல்ல நிர்ப்பந்தம்" - சாட்சி வாக்குமூலம்

post image

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் கடந்த 2008ம் ஆண்டு மசூதி அருகே வெடிகுண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பை இந்து அமைப்புகள் நடத்தியதாக மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் படையினர் தெரிவித்திருந்தனர்.

அதோடு இவ்வழக்கில் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், ராணுவ அதிகாரி புரோஹித் உட்பட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சிறப்பு நீதிமன்ற நீதிபதி லஹோதி 1000 பக்க தீர்ப்பை வழங்கி இருந்தார். அதில் சாட்சி மிலிந்த் ஜோஷி ராவ் என்பவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், "மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் படையினர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் இந்திர குமார், சுவாமி அசிமானந்த், பேராசிரியர் தியோதர் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பதாகக் கூறும்படி தனக்கு நெருக்கடி கொடுத்தனர்.

அவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்று சொன்னால்தான் என்னை விட்டுவிடுவோம் என்று கூறி என்னை ஒரு வாரம் தீவிரவாதத் தடுப்புப் படையினர் தங்களது காவலில் வைத்திருந்தனர்" என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே தீவிரவாதத் தடுப்புப் படையில் இடம் பெற்று இருந்த இன்ஸ்பெக்டர் மெஹ்பூப் என்பவர் தன்னிடம் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தைக் கைது செய்யும்படி கூறி அனுப்பி வைத்தனர் என்று கூறி இருந்தார். ஆனால் இக்குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.

இதே போன்று மாலேகாவ் குண்டு வெடிப்பை நடத்தியதாகக் கூறப்படும் அபினவ் பாரத் இந்து அமைப்பில் பல முக்கிய ராணுவ வீரர்களுக்குப் பங்கு இருப்பதாக சிறப்பு நீதிமன்றத்தில் ராணுவ அதிகாரி புரோஹித் தெரிவித்திருந்தார். ஆனால் அதனையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

குண்டு வெடிப்பின் போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்புகளைக் களங்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Death cafe: டீ, காபி உடன் மரணம் பற்றிய உரையாடல் - இந்த டெத் கஃபே எதற்காக உள்ளது தெரியுமா?

பொதுவாக மரணத்தைப் பற்றி யாரும் அமர்ந்து பேச மாட்டார்கள். மரணம் என்ற வார்த்தையே ஒரு வித உணர்ச்சி தொடர்பான விஷயமாக தோன்றும். ஆனால் மரணத்தை பற்றி பேசுவதற்கென்று ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால... மேலும் பார்க்க

Male birth control pill: ஆண்களுக்கான முதல் கருத்தடை மாத்திரை! - பக்க விளைவுகள் உண்டா?

உலகளவில் கருத்தடைக்கான பொறுப்பு 70 முதல் 75 சதவிகிதம் வரை பெண்கள் மீதே திணிக்கப்படுவதாக, ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியமும், உலக சுகாதார அமைப்பும் இதற்கான சிறப்பு ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கின்றன... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறிக்கப்பட்ட இலாகா!

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் மழை காலக்கூட்டத்தொடர் கடந்த வாரம் மும்பையில் நடந்தது. இக்கூட்டத்தொடரின் போது தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சியின் வேளாண்மை துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே தனது மொபைல் போ... மேலும் பார்க்க

Top News: BJP கூட்டணியிலிருந்து OPS விலகல் டு ம.பி-யில் 23000 பெண்கள் மாயம் வரை |ஜூலை 31 ரவுண்ட்அப்

ஜூலை 31 - டாப் செய்திகள்!* திருநெல்வேலி கவின்குமார் ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் காதலி, தாங்கள் இருவரும் உண்மையாகக் காதலித்ததாகவும், தங்களின் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் தவறாகப் பேச வேண்டாம்... மேலும் பார்க்க

சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவைக்கும் வீடியோ!

சவுதி அரேபியாவின் தைஃப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் இன்று கோர விபத்து நடந்துள்ளது. '360 டிகிரி' எனப்படும் ராட்சத ராட்டினத்தின் மையத் தூண் இயக்கத்தின்போது திடீரென உடைந்து விழுந்ததில் 26 பேர... மேலும் பார்க்க

Kerala: கல்லறைகளில் இடம்பெறும் QR கோடு - என்ன காரணம் தெரியுமா?

கேரளாவில் உள்ள கல்லறை ஒன்றில், உலோகத்தால் ஆன QR கோடு உருவாக்கப்பட்டு, பதிக்கப்பட்டுள்ளது. அந்த கோட்டை யாராவது தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால், அந்தக் கல்லறையில் இருக்கும் நபரின் வாழ்க்கை, நினைவுகள்... மேலும் பார்க்க