செய்திகள் :

சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவைக்கும் வீடியோ!

post image

சவுதி அரேபியாவின் தைஃப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் இன்று கோர விபத்து நடந்துள்ளது.

'360 டிகிரி' எனப்படும் ராட்சத ராட்டினத்தின் மையத் தூண் இயக்கத்தின்போது திடீரென உடைந்து விழுந்ததில் 26 பேர் காயமடைந்தனர். இவர்களில் மூவர் மிகவும் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த விபத்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. வைரலாகும் வீடியோவின் படி ராட்சத ராட்டினத்தின் மையத் தூண் இரண்டாக உடைவதையும், அப்போது அதில் இருந்த மக்கள் கூச்சலிடுவதையும் காணமுடிந்தது.

திடீரென ஒரு பெரும் சத்தத்துடன் ராட்டினத்தின் மையப்பகுதி உடைந்து, பயணிகள் இருக்கைகளில் இருக்கும்போதே அது தரையில் விழுந்தது.

உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற ஒரு விபத்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் உள்ள ஃபன் என் ஃபுட் வாட்டர் பார்க்கில் நிகழ்ந்தது. அங்கு ரோலர் கோஸ்டர் விபத்தில் 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Top News: BJP கூட்டணியிலிருந்து OPS விலகல் டு ம.பி-யில் 23000 பெண்கள் மாயம் வரை |ஜூலை 31 ரவுண்ட்அப்

ஜூலை 31 - டாப் செய்திகள்!* திருநெல்வேலி கவின்குமார் ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் காதலி, தாங்கள் இருவரும் உண்மையாகக் காதலித்ததாகவும், தங்களின் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் தவறாகப் பேச வேண்டாம்... மேலும் பார்க்க

Kerala: கல்லறைகளில் இடம்பெறும் QR கோடு - என்ன காரணம் தெரியுமா?

கேரளாவில் உள்ள கல்லறை ஒன்றில், உலோகத்தால் ஆன QR கோடு உருவாக்கப்பட்டு, பதிக்கப்பட்டுள்ளது. அந்த கோட்டை யாராவது தங்களது செல்போனில் ஸ்கேன் செய்தால், அந்தக் கல்லறையில் இருக்கும் நபரின் வாழ்க்கை, நினைவுகள்... மேலும் பார்க்க

’2 பேருமே தத்தெடுக்கப்பட்டவர்கள் தான்’ - தந்தை சொத்தில் பங்கு கேட்ட பிள்ளைகள் ஷாக்!

சீனாவின் தியான்ஜின் நகரில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இறந்த தந்தையின் ரூ.3.6 கோடி (மூன்று மில்லியன் யுவான்) சொத்துக்காக அண்ணன், தங்கை இருவருமே சண்டையிட்டுக் கொண்ட நிலையில் இவர்கள் இருவரும் அவரத... மேலும் பார்க்க

TCS: சிஇஓ முதல் நிர்வாக இயக்குநர் வரை - வைரலாகும் TCS நிறுவன அதிகாரிகளின் சம்பள பட்டியல்

உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடாவின் டிசிஎஸ் (TCS) நிறுவனம், தனது உலகளாவிய ஊழியர்களில் 2 சதவீதத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. டிசிஎஸ் (TC... மேலும் பார்க்க

இங்கிலாந்து: செல்லமாக நக்கிய வளர்ப்பு நாய்; ஒரு வாரத்தில் இறந்துபோன 83 வயது பெண்மணி; என்ன நடந்தது?

இங்கிலாந்தைச் சேர்ந்த 83 வயதான பெண்மணி ஒருவர் தனது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் அவரின் காலை நாவினால் தீண்டியதை எடுத்து அவருக்குத் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். அந்தப் பெண்மணியின் காலில் ஏற்கனவே ... மேலும் பார்க்க

மாலேகாவ் குண்டுவெடிப்பு: "நான் சன்னியாசியாக இருப்பதால்தான்" - விடுதலையான பிரக்யா சிங் பேச்சு

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். மசூதி அருகில் நடந்த இக்குண்டு வெடிப்பில் 100 பேர் காயம் அடைந்தனர்.... மேலும் பார்க்க