செய்திகள் :

`சிபிசிஐடி விசாரிக்கக் கூடாது; போலீஸுக்கு அடிப்படை அறிவு இல்லையா?’ - கவின்குமார் விவகாரத்தில் திருமா

post image

கவின்குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காவல்துறை அதிகாரிகளை மிகக் கடுமையான விமர்சித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்!

ஜூலை 31-ம் தேதி திருநெல்வேலி வருகை தந்த வி.சி.க தலைவர் திருமாவளவன், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின்குமாரின் இல்லத்துக்கு சென்று ஆறுதல் தெரிவித்ததோடு கவின்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

அடிப்படை அறிவு கூட காவல்துறை அதிகாரிகளுக்கு இல்லையா?

அதில் பேசிய வி.சி.க தலைவர் திருமா, “கவின்குமார் ஆணவப் படுகொலை விவகாரத்தில் FIR பதிவு செய்த பிறகும் பெண்ணில் பெற்றோரை கைது செய்து விசாரிக்காமல் இருந்திருக்கிறது காவல்துறை. கேட்டால் குற்றவாளிகள் அல்லாதவர்களை எப்படி கைது செய்ய முடியும் என்று கேட்கின்றார்கள். இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை காவல்துறை எப்படி முடிவு செய்யலாம்.

விக்டிம் சைடு நிக்கணுமா இல்ல பாதிக்கப்பட்டவன் சைடு நிக்கணுமா என்கின்ற அடிப்படை அறிவு கூட காவல்துறை அதிகாரிகளுக்கு இல்லையா..? அதுக்கு தானே உனக்கு யூனிஃபார்ம்..? நிரபராதி பாதிக்கப்படக்கூடாது என்பதை ஜூடீசியல் பார்த்துக்கும். கைது செய்து விசாரணை நடத்துவது தான் உங்க வேலை

ஜீன்ஸ் போட்டு கண்ணாடி போட்டு எங்க குலத்து பெண்களை மயக்க வந்து இருக்காங்கன்னு சொல்றாங்க. இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் சொல்றதுனால ஆண்களை நீங்கள் கொச்சைப்படுத்தவில்லை. மாறாக, உங்கள் வீட்டுப் பெண்களை நீங்களே கொச்சைப்படுத்தி கொள்கிறீர்கள்" எனக் கொதித்தார்

தொடர்ந்து தி.மு.க அரசுக்கு கோரிக்கைகளை அடுக்கிய அவர் “தயவுசெய்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு இதை கொண்டு போக வேண்டாம். உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும். ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம் போட்டு மானிட்டர் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், இழப்பீடு வேண்டாம் என்று சொல்கின்றனர். அது வேற விஷயம்.

ஆனாலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு, ரெண்டு ஏக்கரில் இருந்து ஐந்து ஏக்கர் நிலம், அரசு வேலைவாய்ப்பு, 12 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும். அவர்களுடைய பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி, மதவெறியர்களை கண்டுபிடிக்க உளவுத்துறை தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். கொலை செய்பவர்களையும் அதை செய்ய ஊக்கப்படுத்துபவர்களையும் கண்காணித்து அதற்குண்டான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கின்றது என்ற அடிப்படையில் ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும். தேசிய அளவிலான ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை, மற்ற மாநிலங்கள் இயற்ற தாமதப்படுத்துகின்ற நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய முதன்மையான கோரிக்கைகள்” என்றார் அழுத்தமாக

வி.சி.க உள்ளிட்ட பல தரப்பினரும் ஆணவக் கொலைக்கு தடுப்புக்கு தனிச்சட்டத்தை உருவாக்க அழுத்தம் கொடுத்துவரும் சூழலில்.. தி.மு.க அரசு என்ன செய்யப் போகிறதென்ற விவாதம் தமிழக அரசியலில் கிளம்பியிருக்கிறது!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Vantara: கோவில் யானை அம்பானியின் வந்தாரா பூங்காவிற்கு மாற்றம்; மகாராஷ்டிராவில் வெடிக்கும் போராட்டம்!

மகாரஷ்டிரா, கோலாப்பூரின் நந்தினி மடத்தின் 36 வயது கோவில் யானையான 'மகாதேவி (மதுரி)', அம்பானியின் 'வந்தாரா' உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது பெரும் பேசுபொருளாகி வருகிறது. 1992ம் ஆண்டு முதல் அந்த மடத்... மேலும் பார்க்க

பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம்? - பொதுப்பணித்துறை, வனத்துறை குழப்பம்; வேல்முருகன் சொல்வதென்ன?

தென்காசி மாவட்டத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் தென்காசி அரசு மருத்துவமனை, தென்காசி புதிய பேருந்து நிலையம், மேக்கரை அடவிநயி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், பணியிலிருந்து ஓய்வுபெறும் கடைசி நாளில் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.நாகர்கோவிலைச் சேர்ந்த வேல்ராஜ் 1992-ம் ஆண்டு... மேலும் பார்க்க

Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷனுக்கு ஒரு விசிட்!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2025-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்குக் கிடைத்த முதல் அனுபவமே காவல் நிலையத்தில் தான்! ஒரு மாலை நேரத்தில் சென்னையோட முக்கிய நகரமான திருவல்லிக்கேணியில் இருக்கிற D1 ... மேலும் பார்க்க

OPS: "தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம்"-மு.க.ஸ்டாலின் சந்திப்புக் குறித்து ஓ.பி.எஸ்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை அடையாறு பார்க்கில் வாக்கிங் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அடுத்த சில மணிநேரங்களில், அவரின் அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக் ... மேலும் பார்க்க

"ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம்; ஒன்றிய அரசுகூட கேட்டது, ஆனால், தமிழ்நாடு அரசு..!" - திருமா

நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். கவின் ஆணவப்படுகொலை தொடர்பாக பேசியிருக்கும் விசிக தலைவர் திருமாவளவன்... மேலும் பார்க்க