செய்திகள் :

பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம்? - பொதுப்பணித்துறை, வனத்துறை குழப்பம்; வேல்முருகன் சொல்வதென்ன?

post image

தென்காசி மாவட்டத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் தென்காசி அரசு மருத்துவமனை, தென்காசி புதிய பேருந்து நிலையம், மேக்கரை அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம், புளியரை புதிய காவல் நிலைய கட்டுமான பணி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த நிலையில், பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

உறுதிமொழி குழு ஆய்வு

தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்ற நிலையில், சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது வேல்முருகன் கூறும் போது, “நிலுவையில் உள்ள 117 உறுதிமொழிகளில் இன்றைய தின ஆய்வின் போது 26 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது" என்றார்.

மேலும், பழைய குற்றால அருவி யார் வசம் உள்ளது? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

“பழைய குற்றால அருவியை பொறுத்தவரை பொதுப்பணித்துறைக்கு சொந்தமானதா அல்லது வனத்துறைக்கு சொந்தமானதா என்பது குறித்து இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இது மாநில அளவிலான பிரச்னையாக கருதப்பட்டு, இரண்டு துறை செயலாளர்கள் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயம் எனவும், இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

உறுதிமொழி குழு ஆய்வு

மேலும், "இரண்டாம் நாள் ஆய்வில், புகழ்பெற்ற குற்றாலம் அருவிக்கு நாடு முழுவதிலிமிலிருந்து சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் அங்கு பல்வேறு வசதி குறைபாடுகள் இருப்பதாகவும், அங்கு விற்கப்படும் உணவுப் பொருள்கள் தரமமும், சுகாதாரமற்ற முறையிலும் இருப்பதாகவும், பெண்கள் உடை மாற்றும் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட வேண்டுமென்றும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடமிருந்து குழுவிற்கு பல்வேறு புகார்களும், கோரிக்கைகளும் வந்த நிலையில் இன்று அருவியை நேரில் பார்வையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்தோம்" என்றார்.

Vantara: கோவில் யானை அம்பானியின் வந்தாரா பூங்காவிற்கு மாற்றம்; மகாராஷ்டிராவில் வெடிக்கும் போராட்டம்!

மகாரஷ்டிரா, கோலாப்பூரின் நந்தினி மடத்தின் 36 வயது கோவில் யானையான 'மகாதேவி (மதுரி)', அம்பானியின் 'வந்தாரா' உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது பெரும் பேசுபொருளாகி வருகிறது. 1992ம் ஆண்டு முதல் அந்த மடத்... மேலும் பார்க்க

`சிபிசிஐடி விசாரிக்கக் கூடாது; போலீஸுக்கு அடிப்படை அறிவு இல்லையா?’ - கவின்குமார் விவகாரத்தில் திருமா

கவின்குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காவல்துறை அதிகாரிகளை மிகக் கடுமையான விமர்சித்த அக்கட்சியின் தலைவர் ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், பணியிலிருந்து ஓய்வுபெறும் கடைசி நாளில் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.நாகர்கோவிலைச் சேர்ந்த வேல்ராஜ் 1992-ம் ஆண்டு... மேலும் பார்க்க

Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷனுக்கு ஒரு விசிட்!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2025-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்குக் கிடைத்த முதல் அனுபவமே காவல் நிலையத்தில் தான்! ஒரு மாலை நேரத்தில் சென்னையோட முக்கிய நகரமான திருவல்லிக்கேணியில் இருக்கிற D1 ... மேலும் பார்க்க

OPS: "தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம்"-மு.க.ஸ்டாலின் சந்திப்புக் குறித்து ஓ.பி.எஸ்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை அடையாறு பார்க்கில் வாக்கிங் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அடுத்த சில மணிநேரங்களில், அவரின் அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக் ... மேலும் பார்க்க

"ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம்; ஒன்றிய அரசுகூட கேட்டது, ஆனால், தமிழ்நாடு அரசு..!" - திருமா

நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். கவின் ஆணவப்படுகொலை தொடர்பாக பேசியிருக்கும் விசிக தலைவர் திருமாவளவன்... மேலும் பார்க்க