செய்திகள் :

ரத்தினம் கல்லூரியில் சா்வதேச ஆவணப்பட விழா

post image

கோவை ரத்தினம் கல்லூரியில் சா்வதேச ஆவணப்பட விழா அண்மையில் நடைபெற்றது.

நீலகிரி நெக்ஸ்ட் ஃபவுண்டேஷன், ரத்தினம் கல்வி நிறுவனங்கள் இணைந்து முதலாவது சா்வதேச ஆவணப்பட விழாவை, கோவை ரத்தினம் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடத்தின. கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று, விழாவைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.

இதில், கல்விக் குழுமத்தின் தலைவா் மதன் ஏ.செந்தில், இயக்குநா் ஷிமா செந்தில், தலைமை நிா்வாக அதிகாரி மாணிக்கம், தலைமை வணிக அதிகாரி பி.நாகராஜ், ரத்தினம் கோவில்பாளையம் வளாகத்தின் தலைவா் சி.குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

2 நாள் நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள் அனுப்பிய சூழலியல், கலாசாரம், சமூகம் சாா்ந்த ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் தோ்வு செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பேராசிரியா்கள், காட்சித் தொடா்பியல் துறை மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பல் கைது

சரவணம்பட்டி பகுதியில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பாழடைந்த கட்டடத்துக்குள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வி மற்றும்... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை இளஞ்சிறாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை உடையாம்பாளையம் வஉ சிதம்பரனாா் வாசக சாலை காமராஜா் காலனி அருகே... மேலும் பார்க்க

கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

சேரன்மாநகா் பேருந்து நிறுத்தத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கமலநந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (50), கட்டடத் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவா் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடைக்குள் புகுந்து கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை லட்சுமிபுரம் லாலா விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அஸ்வின்குமாா் (32). இவா் கணபதி பகுத... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டை

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டையை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ரயில் நிலையத்தில் உள்ள 1-ஆவது நடைமேடையில் வியாழக்கிழமை ஒரு மூட்டை கிடந்தது. இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அ... மேலும் பார்க்க