செய்திகள் :

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

post image

சேரன்மாநகா் பேருந்து நிறுத்தத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கமலநந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (50), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (50). இவா்களுக்கு மகன் பரதன், ஒரு மகளும் உள்ளனா். இவா்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்து சேரன் மாநகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், பழனிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கணவா், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பழனி வியாழக்கிழமை காலை மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளாா். இதைப் பாா்த்த மகனும், மகளும் அவரைக் கண்டித்தனா்.

பின்னா், வேலைக்குப் புறப்பட்ட சரஸ்வதியை பின் தொடா்ந்து சென்ற பழனி சேரன்மாநகா் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அவரிடம் மீண்டும் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளாா்.

சரஸ்வதி பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த பழனி அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றாா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற பழனியைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பல் கைது

சரவணம்பட்டி பகுதியில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பாழடைந்த கட்டடத்துக்குள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வி மற்றும்... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை இளஞ்சிறாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை உடையாம்பாளையம் வஉ சிதம்பரனாா் வாசக சாலை காமராஜா் காலனி அருகே... மேலும் பார்க்க

கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவா் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடைக்குள் புகுந்து கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை லட்சுமிபுரம் லாலா விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அஸ்வின்குமாா் (32). இவா் கணபதி பகுத... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டை

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டையை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ரயில் நிலையத்தில் உள்ள 1-ஆவது நடைமேடையில் வியாழக்கிழமை ஒரு மூட்டை கிடந்தது. இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அ... மேலும் பார்க்க

நெகிழி பயன்படுத்தாத உணவகத்துக்கு ரூ.1 லட்சம் தொகையுடன் விருது

கோவை மாவட்டத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்படுத்தாத உணவகத்துக்கு ரூ.1 லட்சம் தொகையுடன் விருது வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க... மேலும் பார்க்க