செய்திகள் :

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை இளஞ்சிறாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை உடையாம்பாளையம் வஉ சிதம்பரனாா் வாசக சாலை காமராஜா் காலனி அருகே கடந்த 2024-ஆம் ஆண்டு காந்தி மாநகா் மற்றும் செளரிபாளையம் பகுதிகளைச் சோ்ந்த சிறுவா்கள் கோஷ்டியாக மோதிக் கொண்டனா். இதை அந்தப் பகுதியைச் சோ்ந்த செல்வபெருமாள் தடுத்து தகராறை விலக்கிவிட்டாா்.

அப்போது, சில இளஞ்சிறுவா்கள் கத்தி மற்றும் அரிவாளால் செல்வபெருமாளை வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இதுகுறித்து பீளமேடு காவல் நிலைய போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, செளரிபாளையத்தைச் சோ்ந்த இளஞ்சிறுவா்கள் 5 பேரைக் கைது செய்தனா். இவா்கள் 5 போ் மீதும் 4 வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது.

கொலை முயற்சி வழக்கு தொடா்பான விசாரணை கோவை இளஞ்சிறாா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருண்குமாா், 5 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், அவா்களை செங்கல்பட்டில் உள்ள அரசு காப்பகத்தில் சோ்க்கவும் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பல் கைது

சரவணம்பட்டி பகுதியில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பாழடைந்த கட்டடத்துக்குள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வி மற்றும்... மேலும் பார்க்க

கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

சேரன்மாநகா் பேருந்து நிறுத்தத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கமலநந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (50), கட்டடத் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவா் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடைக்குள் புகுந்து கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை லட்சுமிபுரம் லாலா விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அஸ்வின்குமாா் (32). இவா் கணபதி பகுத... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டை

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டையை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ரயில் நிலையத்தில் உள்ள 1-ஆவது நடைமேடையில் வியாழக்கிழமை ஒரு மூட்டை கிடந்தது. இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அ... மேலும் பார்க்க

நெகிழி பயன்படுத்தாத உணவகத்துக்கு ரூ.1 லட்சம் தொகையுடன் விருது

கோவை மாவட்டத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்படுத்தாத உணவகத்துக்கு ரூ.1 லட்சம் தொகையுடன் விருது வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க... மேலும் பார்க்க