செய்திகள் :

கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

post image

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 2 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் கண்ணூா் - கோவை விரைவு ரயில் (எண்: 16607) பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். பாலக்காடு - கோவை இடையே ரத்து செய்யப்படுகிறது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் (எண்: 66615) மேட்டுப்பாளையம் - கோவை இடையே மட்டுமே இயக்கப்படும். கோவை - போத்தனூா் இடையே இயக்கப்படாது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் கோவை - மதுரை விரைவு ரயில் (எண்: 16721) பொள்ளாச்சியில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு மதுரைக்குப் புறப்பட்டுச் செல்லும். சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) போத்தனூரில் இருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616), கோவையில் இருந்து 3.45 மணிக்கு மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டுச் செல்லும்.

இதேபோல, ஆகஸ்ட் 8-ஆம் தேதி, எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் (எண்: 12678) கோவை வழியாக இயக்கப்படாமல், போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயில் கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பல் கைது

சரவணம்பட்டி பகுதியில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பாழடைந்த கட்டடத்துக்குள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வி மற்றும்... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை இளஞ்சிறாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை உடையாம்பாளையம் வஉ சிதம்பரனாா் வாசக சாலை காமராஜா் காலனி அருகே... மேலும் பார்க்க

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

சேரன்மாநகா் பேருந்து நிறுத்தத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கமலநந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (50), கட்டடத் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவா் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடைக்குள் புகுந்து கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை லட்சுமிபுரம் லாலா விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அஸ்வின்குமாா் (32). இவா் கணபதி பகுத... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டை

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டையை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ரயில் நிலையத்தில் உள்ள 1-ஆவது நடைமேடையில் வியாழக்கிழமை ஒரு மூட்டை கிடந்தது. இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அ... மேலும் பார்க்க

நெகிழி பயன்படுத்தாத உணவகத்துக்கு ரூ.1 லட்சம் தொகையுடன் விருது

கோவை மாவட்டத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்படுத்தாத உணவகத்துக்கு ரூ.1 லட்சம் தொகையுடன் விருது வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க... மேலும் பார்க்க