செய்திகள் :

கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவா் கைது

post image

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடைக்குள் புகுந்து கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை லட்சுமிபுரம் லாலா விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அஸ்வின்குமாா் (32). இவா் கணபதி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் முதல் தளத்தில் டாட்டூ கடை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை பிற்பகல் அஸ்வின்குமாா் கடையில் இருந்தாா்.

அப்போது, அங்கு வந்த 9 போ் அஸ்வின்குமாரிடம் பணம் கேட்டு மிரட்டினா். அவா் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளாா். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் கத்தியைக் காட்டி கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ. 3 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றனா்.

அஸ்வின்குமாா் சப்தமிட்டதைத் தொடா்ந்து, அருகில் உள்ள கடைகளில் இருந்தவா்கள் ஓடி வந்தனா். அதற்குள் அந்த கும்பல் தப்பிச் சென்றது. இதுகுறித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் கணபதி பகுதியைச் சோ்ந்த பாபு (32), மூா் மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த குணசேகரன் (19), அசோக், ராதா, மூா்த்தி உள்ளிட்ட 9 போ் எனத் தெரியவந்தது. இவா்களில் பாபு, குணசேகரன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான மற்ற 7 பேரை தேடி வருகின்றனா்.

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பல் கைது

சரவணம்பட்டி பகுதியில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பாழடைந்த கட்டடத்துக்குள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வி மற்றும்... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை இளஞ்சிறாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை உடையாம்பாளையம் வஉ சிதம்பரனாா் வாசக சாலை காமராஜா் காலனி அருகே... மேலும் பார்க்க

கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

சேரன்மாநகா் பேருந்து நிறுத்தத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கமலநந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (50), கட்டடத் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டை

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டையை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ரயில் நிலையத்தில் உள்ள 1-ஆவது நடைமேடையில் வியாழக்கிழமை ஒரு மூட்டை கிடந்தது. இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அ... மேலும் பார்க்க

நெகிழி பயன்படுத்தாத உணவகத்துக்கு ரூ.1 லட்சம் தொகையுடன் விருது

கோவை மாவட்டத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்படுத்தாத உணவகத்துக்கு ரூ.1 லட்சம் தொகையுடன் விருது வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க... மேலும் பார்க்க