செய்திகள் :

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

post image

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்:

"இன்று உலகம் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து கடந்து செல்லும் சூழலில் உள்ளது. நிலைத்தன்மையற்ற நிலைமை எங்கும் உள்ளது. அப்படியிருக்கும் சூழலில், ஒவ்வொரு தேசமும் தங்கள் சொந்த நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

உலகில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது. இதனையடுத்து, இந்தியாவின் நலனுக்காக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

நமது விவசாயிகள், தொழிற்சாலைகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, அவர்களின் நலன் - இவையனைத்துமே நமக்கு முக்கியம். இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் அரசு தம்மால் இயன்ற ஒவ்வொரு முயற்சியையும் எடுத்து வருகிறது".

"இந்தியாவின் குடிமக்களாக நமக்கும் சில பொறுப்புகள் உள்ளன. இது மோடிக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்குமே பொருந்தும்.

இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதாரமாக மாற்ற யாரெல்லாம் விரும்புகிறாரோ, அது யாராயினும்சரி, எந்த அரசியல் கட்சியாகவும் இருக்கலாம், தலைவராகவும் இருக்கலாம், அவர்கள் நாட்டின் நலனைக் கருதி பேச வேண்டும். அதனுடன் மக்களிடம் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்த அவர்கள் வலியுறுத்த வேண்டும்.

நாம் எதையாவது வாங்க நினைத்தால், அப்போது ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும்: ஒரு இந்தியனின் வியர்வையால் தயாரான பொருள்களை நம் வாங்கப்போகிறோம் என்பதே அது.

இந்திய மக்களால் தயாரிக்கப்பட்ட எதுவானாலும்சரி, இந்திய மக்களின் அறிவாற்றலைப் பயன்படுத்தி உருவான எதுவானாலும், இந்திய மக்களின் வியர்வையால் விளைந்த எதுவானாலும், அவையெல்லாம் நமக்கு ‘சுதேசியே’. ‘உள்ளூருக்கு முக்கியத்துவம்’ என்ற தாரக மந்திரத்தை பின்பற்ற நாம் தயாராக வேண்டும்" என்றார்.

We will have to adopt the 'vocal for local' mantra," - Prime Minister Narendra Modi

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாக சந்தேகமடைந்த கணவன் விரக்தியில் தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சூரத்தில் ஆசிரியர... மேலும் பார்க்க

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம் இருப்பதையடுத்து வெளியூர்களுக்குச் செல்ல மக்கள் அதிகம் பேர் விரும்புவதால் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.ஆகஸ்ட்டில், குறிப்பிட்ட சில உள்ளூர் விமான சேவைகளின... மேலும் பார்க்க

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

பஞ்சாபில் நகையை பறித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கார் மீது மோதியதில் 12 வயது சிறுவன் பலியானான். பஞ்சாப் மாநிலம், பட்டி சுரா சிங் கிராமத்தைச் அமன்தீப் கௌர் மற்றும் அவரது கணவர் ரஞ்சி... மேலும் பார்க்க

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்... மேலும் பார்க்க

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்ல ரக்‌ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்ப... மேலும் பார்க்க