செய்திகள் :

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

post image

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம் இருப்பதையடுத்து வெளியூர்களுக்குச் செல்ல மக்கள் அதிகம் பேர் விரும்புவதால் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட்டில், குறிப்பிட்ட சில உள்ளூர் விமான சேவைகளின் கட்டணம் அதிகபட்சமாக 80 சதவீதம் வரையிலும், வெளிநாட்டு விமான சேவைகளின் கட்டணம் 65 சதவீதம் வரையிலும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

தில்லி - மும்பை, தில்லி - பெங்களூரு, மும்பை - கோவா ஆகிய வழித்தடங்களில் ஜூலையுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட்டில் விமான டிக்கெட் கட்டணம் 40 - 60 சதவீதம் உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

தில்லி - மும்பை விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ. 5,000 என்ற நிலையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் விற்கப்படும். ஆனால் இந்த ஆகஸ்ட்டில் ஒரு டிக்கெட் விலை ரூ. 8,000 வரை அதிகரித்துள்ளது. இது ஆக. 7 - 18 வரையிலான காலக்கட்ட நிலவரம்.

தில்லி - பெங்களூரு டிக்கெட்டும் ரூ. 9,000 வரை உயர்ந்துள்ளது. இது வழக்கத்தைவிட 50 சதவீதம் அதிகம்.

சர்வதேச வழித்தடங்களில், தென்கிழக்காசிய மற்றும் அரபு நாடுகளுக்கு விமான டிக்கெட் விலை விண்ணை முட்டியுள்ளது. தில்லி - துபை, கொச்சி - துபை, மும்பை - துபை வழித்தடங்களில் விமான டிக்கெட் வழக்கமாக ரூ. 16,000 வரை இருக்கும் நிலையில், தற்போது ரூ. 24,000 வரை - அதாவது 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

a sharp spike in airfares — with ticket prices soaring as much as 80% on some key domestic routes and 50–65% on popular international routes

ஒடிஸாவில் தீ வைக்கப்பட்ட மாணவி: 2 வாரமாக உயிர் பிழைக்க போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ஒடிஸாவில் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்ட சிறுமி, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெ... மேலும் பார்க்க

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாக சந்தேகமடைந்த கணவன் விரக்தியில் தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சூரத்தில் ஆசிரியர... மேலும் பார்க்க

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைய... மேலும் பார்க்க

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

பஞ்சாபில் நகையை பறித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கார் மீது மோதியதில் 12 வயது சிறுவன் பலியானான். பஞ்சாப் மாநிலம், பட்டி சுரா சிங் கிராமத்தைச் அமன்தீப் கௌர் மற்றும் அவரது கணவர் ரஞ்சி... மேலும் பார்க்க

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்... மேலும் பார்க்க

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான... மேலும் பார்க்க