செய்திகள் :

"இறந்தவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்" - ராகுல் காந்தியின் பேச்சுக்கு அருண் ஜெட்லி மகன் பதில்

post image

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறித்துப் பேசிய கருத்துக்களுக்கு அவரது மகன் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.

விவசாயிகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்திய அரசாங்கம் எதிர்க்கட்சியின் எதிர்ப்பைக் குறைக்க அருண் ஜெட்லி வழியாக தன்னை மிரட்டியதாகப் பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.

அருண் ஜெட்லி
அருண் ஜெட்லி

"மிரட்டும் குணமுடையவரல்ல என் தந்தை"

அதற்கு எதிராக ட்வீட் செய்த அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி, "விவசாயச் சட்டங்கள் தொடர்பாக மறைந்த என் தந்தை அருண் ஜெட்லி தன்னை மிரட்டியதாக ராகுல் காந்தி இப்போது கூறுகிறார்.

என் தந்தை 2019ம் ஆண்டு மரணமடைந்தார் என்பதை நான் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். வேளாண் சட்டங்கள் 2020ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டன.

மிக முக்கியமாக யாரும் எதிரான பார்வை கொண்டிருப்பதற்காக மிரட்டும் குணமுடைய நபரல்ல என் தந்தை. அவர் ஒரு உறுதியான ஜனநாயகவாதி, எப்போதும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.

அரசியலில் நடக்கக் கூடிய இதுபோன்ற சூழ்நிலைகள் எழுந்தால், அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருமித்த தீர்வை அடைய சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விவாதங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பார். அவர் அப்படித்தான் இருந்தார், இன்றும் அவரது மரபு தொடர்கிறது.

நம்முடன் இல்லாதவர்களைப் பற்றிப் பேசும்போது ராகுல் காந்தி இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

இதேபோல மனோகர் பாரிக்கர் ஜியைப் பற்றியும் பேச முயன்றார். அவரது இறுதி நாட்களை அரசியலாக்க முயன்றதும் மோசமான செயல்பாடு.

இறந்தவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்" என எழுதியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Rahul Gandhi: "நான் ராஜா அல்ல; ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன்" - ராகுல் காந்தி ஓபன் டாக்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.அதன்பின்னர், காங்கிரஸ் எம்.பி-யாகச் செயல்பட்டு வந்த ராகுல் காந்தி தற்போது மக்களவை எதிர்க்கட... மேலும் பார்க்க

SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், ஒரே மாதத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) தே... மேலும் பார்க்க

பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவுக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை; சிறப்பு நீதிமன்றம் அதிரடி

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா நேற்று நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

"ஓ.பி.எஸ் வந்துகொண்டிருக்கிறார்..!" - கூட்டணி குறித்து திமுக அமைச்சர் பேச்சு!

திருச்சியில் 'நலன் காக்கும் ஸ்டாலின்' முகாமைப் பார்வையிட்ட நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணிக்கு வருவதாகப் பேசியிரு... மேலும் பார்க்க

"அது நடக்கவில்லையென்றால் மோடி இன்று பிரதமரே அல்ல" - ஆதாரங்களை வெளியிடுவதாக ராகுல் உறுதி

மக்களவைத் தேர்தல் கடந்த ஆண்டு முடிந்த பிறகு நடத்தப்பட்ட மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி தொடர்ச்சியாகக் குற்றச்சாட்... மேலும் பார்க்க

"எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான்" - ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.கடந்த மாதம், "என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்தி... மேலும் பார்க்க