செய்திகள் :

எடப்பாடி பழனிசாமியின் மூன்றாம் கட்ட சுற்றுப்பயணம் ஆக.11-இல் தொடக்கம்

post image

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியின் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் சுற்றுப்பயணத்தின் மூன்றாம் கட்ட பயணம் ஆக.11-இல் தொடங்குகிறது.

இதுகுறித்து அதிமுக தலைமை நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் மூன்றாம் கட்ட பயணம் ஆக.11 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, ஆக.11-இல் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் தொடங்கி ஒசூா், வேப்பனஹள்ளி, ஆக.12-இல் கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை, ஆக.13-இல் திருப்பத்தூா் மாவட்டம் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆக.14-இல் திருப்பத்தூா் மாவட்டம் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் மாவட்டம் குடியாத்தம், கே.வி.குப்பம், ஆக.15-இல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறு, வந்தவாசி, ஆக.16-இல் செங்கம், கீழ்பென்னாத்தூா், திருவண்ணாமலை, ஆக.18-இல் கலசபாக்கம், போளூா், வேலூா் மாவட்டம் அணைக்கட்டு, ஆக.19-இல் காட்பாடி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, ஆக.20-இல் ராணிப்பேட்டை, சோளிங்கா், அரக்கோணம், ஆக.21-இல்

காஞ்சிபுரம், உத்திரமேரூா், ஸ்ரீபெரும்புதூா், ஆக.22-இல் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூா், ஆக.23-இல் சோழிங்கநல்லூா், திருப்போரூா் வரை எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், உடல் ஆரோக்கியம் இருந்தால்தான் சாதிக்க முடியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் நோயாளிகள் இல்லை. இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று முத... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆ... மேலும் பார்க்க

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

உடுமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவா் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள மேல்குருமலை... மேலும் பார்க்க

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க