ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு
சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), ‘சுதந்திர தின திட்டத்தை’ வெள்ளிக்கிழமை (ஆக. 1) அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் ஆகஸ்ட் மாதம் 30 நாள்களுக்கு பிஎஸ்என்எல்-இன் 4ஜி சேவைகளை இலவசமாக சோதித்துப் பாா்க்கும் வகையில் ரூ.1-க்கு பிஎஸ்என்எல் கைப்பேசி சேவை வழங்குகிறது.
இது இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும், இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க பொதுமக்களுக்கு இது வாய்ப்பாகும்.
இந்தத் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா, 100 குறுஞ்செய்தி அனுப்பலாம் அத்துடன் ஒரு பிஎஸ்என்எல் சிம் முற்றிலும் இலவசம் வழங்கப்படும். பொதுமக்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல்
வாடிக்கையாளா் சேவை மையம் அல்லது முகாம் நடைபெறும் இடங்களுக்குச் சென்று இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.