செய்திகள் :

தலையிலிருந்த பெரிய பை விழுந்ததே தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலுக்குக் காரணம்: அஸ்வினி வைஷ்ணவ்

post image

புது தில்லி: ஒரு பயணியின் தலையில் இருந்த மிகப்பெரிய மூட்டை பிற பயணிகள் மீது விழுந்ததன் தொடர்ச்சியாகவே, பிப். 15 தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் நேரிட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

கடந்த பிப்.15-ஆம் தேதி புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 போ் உயிரிழந்தனா். மகா கும்பமேளா நடைபெற்று வந்த பிரயாக்ராஜுக்கு ரயில்களில் ஏறுவதற்காக காத்திருந்த பயணிகளின் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்த நெரிசல் சம்பவம் நேரிட்டது.

தில்லி கூட்ட நெரிசல் குறித்து வெள்ளிக்கிழமை, மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய அமைச்சர், விபத்து குறித்து அமைக்கப்பட்ட உயர்நிலை விசாரணைக் குழுவினர் விசாரணையில் இந்த தகவல் தெரிய வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், புது தில்லி ரயில் நிலையத்தின் 14 மற்றும் 15வது நடைமேடைகளுக்கு இடையிலான படிகட்டில், பயணி ஒருவர் தலையில் வைத்திருந்த மூட்டை மற்றொரு பயணி மீது விழுந்ததின் தொடர்ச்சியாக, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேர் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று, இரவு 8.15 மணிக்கு பயணிகளின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. பயணிகள் வைத்திருந்த மிகப்பெரிய பைகள்தான், கடும் நெரிசலையும் சிக்கலையும் ஏற்படுத்தியது. ஒரு பயணியின் தலையில் வைத்திருந்த பெரிய பை ஒன்று, கீழே விழ, அது மற்றொரு பயணி மீது விழுந்ததில், அவர் தடுமாறி விழுந்தபோது அடுத்தடுத்து நின்றிருந்தவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு நேரிட்டு 8.48 மணிக்கு கூட்ட நெரிசலாக மாறி ஒவ்வொருவராக விழுந்ததில், அவர்கள் மீது மற்றவர்கள் மிதித்து ஓடிய சம்பவத்தில் 18 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 33 பேரின் குடும்பங்களுக்கு இந்திய ரயில்வே தரப்பில் தலா ரூ.2 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்... மேலும் பார்க்க

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்ல ரக்‌ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்ப... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று(ஆக. 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.வீட்டுப் பணிப்... மேலும் பார்க்க

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் மூவரின் சடலம் கண்டெக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் எஸ்பி சதீஷ் யாதவ் கூறுகையில், பரத்பூ... மேலும் பார்க்க

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

சத்தீஸ்கரில் மதமாற்றம் செய்ய முற்பற்றதாக கன்னியாஸ்திரிகளை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் சிறுமிகள் மூவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவர்களை மதமாற்றம் செய்ய முற்பற்றதாக எழு... மேலும் பார்க்க