செய்திகள் :

Kohli: "அன்று அவர் கலங்கியபடி நின்றது வருத்தமாக இருந்தது" - விராட் கோலி குறித்து யூஸ்வேந்திர சாஹல்

post image

2008-ம் ஆண்டுமுதல் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஆண்டு (ஐபிஎல்-2025) தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

ஒரே அணிக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடி, பெங்களூரு அணி வெற்றி பெற்ற போது மைதானத்தில் கண்கலங்கி அழுதபடி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் விராட் கோலி. அந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

யூஸ்வேந்திர சாஹல் - விராட் கோலி
யூஸ்வேந்திர சாஹல் - விராட் கோலி

ஆனால், விராட் கோலி மகிழ்ச்சியில் மட்டுமல்ல, ஒரு தோல்வி நடந்தபோது மிகுந்த மனவேதனையில் விராட் கோலி அழுதார் என இந்தியச் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், ``கடந்த 2019-ம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிப் போட்டி நடந்தது. நியூசிலாந்து அணியை எதிர்த்து நாங்கள் விளையாடினோம்.

அப்போது ஒரு கட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடிக்க முடியாமல் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அந்தப் போட்டியின் போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அனைத்து வீரர்களுமே கண்கலங்கியபடி இருந்தனர்.

அதிலும் கேப்டன் விராட் கோலி அந்தத் தோல்வியைத் தாங்காமல் பாத்ரூமிற்குச் சென்று அழுததை நான் நேரில் பார்த்தேன். அப்படி அவர் கலங்கியபடி நின்றது மிக வருத்தமாக இருந்தது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Yuzvendra Chahal: "விவாகரத்து பேச்சை யார் முதலில் எடுத்தது?" - மனம் திறக்கும் யுஸ்வேந்திர சஹால்

இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால், கடந்த 2020 டிசம்பரில், நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத் தி... மேலும் பார்க்க

அபிமன்யு ஈஸ்வரன்: `கருணுக்கு வாய்ப்பளிக்கிறார்கள்; என் மகன் அழுத்தத்தில் இருக்கிறான்’ - தந்தை வேதனை

இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூலை 31) தொடங்கியது.8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர், முதல் மூன்று போட்டிகளில் ஒரு அரைசதம் கூட ... மேலும் பார்க்க

`விவாகரத்து விசாரணையின்போது அந்த டி-சர்ட் அணிந்து வந்தது ஏன்?’ - சஹால் சொன்ன விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.யுஸ்வேந்திர சஹால் - ... மேலும் பார்க்க

Chahal: `தினமும் இரண்டு மணிநேரம் அழுவேன்; தூக்கமே வராது’ - விவாகரத்து குறித்து சஹால்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.விவாகரத்துநடிகை, நடன... மேலும் பார்க்க

ENG vs IND: மீண்டும் புறக்கணிக்கப்பட்ட குல்தீப்; கருணுக்கு மேலும் ஒரு வாய்ப்பு; கில் கூறுவது என்ன?

இங்கிலாந்து vs இந்தியா நடப்பு டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டி டிரா ஆகியிருக்கிறது.இங்கிலாந்து அணி 2 - 1 எனத் தொடரில் முன்... மேலும் பார்க்க

Ind vs Eng: `க்ரீன் பிட்ச்; ஓவல் டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா?’ - கில் முடிவு தான் என்ன?

இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. முன்னதான செய்தியாளர் சந்திப்பில் பும்ரா பிளேயிங் 11ல் இருப்பாரா இல்லையா என்ற கேள்விக்கு... மேலும் பார்க்க