செய்திகள் :

அபிமன்யு ஈஸ்வரன்: `கருணுக்கு வாய்ப்பளிக்கிறார்கள்; என் மகன் அழுத்தத்தில் இருக்கிறான்’ - தந்தை வேதனை

post image

இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூலை 31) தொடங்கியது.

8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர், முதல் மூன்று போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் சொதப்பியதால் நான்காவது போட்டியில் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார். இருப்பினும், கடைசி போட்டியில் மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், கடந்த 2022 முதல் இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் 15 பேர் கொண்ட அணிக்கு தேர்வுசெய்யப்படும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு பிளெயிங் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

அபிமன்யு ஈஸ்வரன்
அபிமன்யு ஈஸ்வரன்

இந்த நிலையில்தான் நடப்பு இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் தனது மகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தனியார் ஊடகத்திடம் பேசிய ரங்கநாதன் ஈஸ்வரன், "அபிமன்யு தனது டெஸ்ட் அறிமுகத்திற்காக எத்தனை நாள்களாக காத்திருக்கிறார் என்று நான் கணக்கிடவில்லை.

எத்தனை ஆண்டுகளாக காத்திருக்கிறார் என்று நான் கணக்கிட்டு வருகிறேன். இதோடு மூன்று ஆகிவிட்டது.

அவர்கள் எப்படி ஒப்பிடுகிறார்கள் எனக்குப் புரியவில்லை!

ஒரு பேட்ஸ்மேனின் வேலை ரன் அடிப்பதுதான். அதை அவர் செய்திருக்கிறார்.

கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, இரண்டு இந்தியா ஏ போட்டிகளில் அவர் சிறப்பாகச் செயல்படாததால் பிளெயிங் லெவனில் இடம் பெறவில்லை என்று கூறினர். அதுகூட ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.

ஆனால், பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்பு அபிமன்யு விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் கருண் நாயர் அணியிலேயே இல்லை.

துலீப் டிராபி அல்லது இரானி கோப்பை அடிப்படையில் கருண் நாயர் தேர்வு செய்யப்படவில்லை.

அபிமன்யு ஈஸ்வரன்
அபிமன்யு ஈஸ்வரன்

கடந்த ஆண்டு முதல் அவற்றில் அபிமன்யு 864 அடித்திருக்கிறார். அப்படியானால் அவர்கள் எப்படி ஒப்பிடுகிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை.

அவர்கள் கருண் நாயர் மீது நம்பிக்கை வைத்து ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

என் மகன் மன அழுத்தத்தில் இருக்கிறான். ஆனால், இது இப்படித்தான் நடக்கும்.

ஐ.பி.எல்லில் ஆடியதை வைத்து சிலர் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆனால், ஐ.பி.எல் போட்டிகளை வைத்து டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யக்கூடாது.

ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, இரானி கோப்பை ஆகியவைதான் டெஸ்ட் அணித் தேர்வுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

அபிமன்யு ஈஸ்வரன் 103 முதல் தர போட்டிகளில் விளையாடி, 27 சதங்களும் 31 அரைசதங்களுடன் 48.70 ஆவரேஜில் 7,841 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

`விவாகரத்து விசாரணையின்போது அந்த டி-சர்ட் அணிந்து வந்தது ஏன்?’ - சஹால் சொன்ன விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.யுஸ்வேந்திர சஹால் - ... மேலும் பார்க்க

Chahal: `தினமும் இரண்டு மணிநேரம் அழுவேன்; தூக்கமே வராது’ - விவாகரத்து குறித்து சஹால்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்கு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.விவாகரத்துநடிகை, நடன... மேலும் பார்க்க

ENG vs IND: மீண்டும் புறக்கணிக்கப்பட்ட குல்தீப்; கருணுக்கு மேலும் ஒரு வாய்ப்பு; கில் கூறுவது என்ன?

இங்கிலாந்து vs இந்தியா நடப்பு டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டி டிரா ஆகியிருக்கிறது.இங்கிலாந்து அணி 2 - 1 எனத் தொடரில் முன்... மேலும் பார்க்க

Ind vs Eng: `க்ரீன் பிட்ச்; ஓவல் டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா?’ - கில் முடிவு தான் என்ன?

இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. முன்னதான செய்தியாளர் சந்திப்பில் பும்ரா பிளேயிங் 11ல் இருப்பாரா இல்லையா என்ற கேள்விக்கு... மேலும் பார்க்க

ENG vs IND: 'நான் மட்டும் கேப்டனா இருந்திருந்தா இங்கிலாந்து அணியை.!' - சுனில் கவாஸ்கர் காட்டம்

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அந்தப் போட்டியில்`, ஹரி ப்ரூக், பென் டக்கெட் போன்ற பகுதி நேர பவுலர்களுக்கு எதிராக விளையாடித்தான் நீங்க... மேலும் பார்க்க

Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரும் பத்திரிகையாளர்

இங்கிலாந்து vs இந்தியா நடப்பு டெஸ்ட் தொடரில் பேட்ஸ்மேன்கள், பவுலர்களைத் தாண்டி இரண்டு ஆல்ரவுண்டர்கள் அபாரமாக ஆடி வருகின்றனர்.ஒருவர் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இன்னொருவர் இந்திய வீரர் ரவீந்திர ... மேலும் பார்க்க