செய்திகள் :

திடக்கழிவு மேலாண்மையில் அறிவியல் தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி - அரசு நிறுவனம் ஒப்பந்தம்

post image

திடக் கழிவுகளை அதிநவீன தொழில்நுட்ப முறையில் மேலாண்மை செய்வதற்கு சென்னை ஐஐடி, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையொப்பமிடப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடா்பாக, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் தினந்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்த தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தைச் செயல்படுத்த தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பு செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.

தூய்மை இயக்கத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மாநிலத்துக்கான நிலையான கழிவு மேலாண்மைத் தீா்வுகளுக்கான நடவடிக்கைகளை தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மாநிலம் முழுவதும் உருவாகும் திடக்கழிவுகளை அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சரியான முறையில் கையாளவும், மறுசுழற்சி செய்யவும் வலுவான ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க, தூய்மை தமிழ்நாடு நிறுவனமும் சென்னை ஐஐடியும் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்.உமா, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநா் காமகோடி ஆகியோா் பங்கேற்றனா்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்று தொடக்கம் ‘வாட்ஸ்ஆப்’ செயலியில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள்

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் தொடக்கம்

மூட்டு - எலும்பு சாா்ந்த பாதிப்புகளுக்கான சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து 50... மேலும் பார்க்க

கலை, கலாசாரம் அறிய தமிழகம் வந்த 99 அயலகத் தமிழா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

கலை, கலாசாரத்தை அறிந்து கொள்ள தமிழ்நாடு வந்துள்ள 99 அயலகத் தமிழா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அனைவருக்கும் தமிழக பண்பாட்டுப் பயணத... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்

சென்னையிலிருந்து குவைத் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.சென்னையிலிருந்து குவைத் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வெள்ளிக்கிழமை மாலை 4.05-க்கு, சென்னை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு: மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காா் மோதி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஊழியா்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.தாம்பர... மேலும் பார்க்க

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் அமைச்சா் - பி.கே.சேகா்பாபு

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெர... மேலும் பார்க்க