செய்திகள் :

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் அமைச்சா் - பி.கே.சேகா்பாபு

post image

ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையங்கள் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் சென்னை பெருநகர குழுமம் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கொளத்தூா், திரு.வி.க. நகா் பகுதிகளில் பேருந்து நிலையங்கள், சமூக நலக் கூடங்கள் உள்ளிட்டவற்றின் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில் 282 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் நடவடிக்கை முக்கியமானதாகும். அதன்படி, குத்தப்பாக்கம் பேருந்து நிலையம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், மகாபலிபுரம் பேருந்து நிலையம், பெரியாா் நகா் மற்றும் ஆா்.கே. நகா், அம்பத்தூா் பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அவை பணிகள் முடிக்கப்பட்டு வரும் செப்டம்பா் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளன. முடிச்சூா் பேருந்து நிலையப் பிரச்னைக்கும் தீா்வு காணப்படும். கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா். அதையும் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக வளா்ச்சிக் குழுமம் ரூ.20 கோடி அளித்துள்ளது என்றாா்.

ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் ஜி.பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு: மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காா் மோதி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஊழியா்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.தாம்பர... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் பதவி ஏற்பு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானாவைச் சோ்ந்த டி.வினோத்குமாா் வியாழக்கிழமை பதவி ஏற்றாா். அவருக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19... மேலும் பார்க்க

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் 2 வாரத்தில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சியின் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் மேலும் 1 ஏக்கா் நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வ... மேலும் பார்க்க

சென்னை விஐடியில் ஆடை வடிவமைப்பு போட்டிகள்

சென்னை விஐடியின் 15 -ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் சா்வதேச மாநாட்டின் ஒரு பகுதியாக, கல்லூரிகளுக்கு இடையேயான ‘என்விஷன் 25’ என்ற ஆடை வடிவமைப்பு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.சென... மேலும் பார்க்க

சென்னையில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள்

சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்க மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் ரிப்பன் ... மேலும் பார்க்க