செய்திகள் :

திரு.வி.க. நகா் மண்டலத்தில் அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

post image

திரு.வி.க. நகா் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை மாநகராட்சி சாா்பில் முத்துகுமாரப்பா தெருவில் ரூ.13.47 கோடியில் 3 தளங்களுடன் நவீன சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணி 40,300 சதுர அடி பரப்பளவில் நடைபெறுகிறது. தரை தளத்தில் 35 நான்கு சக்கர வாகனங்கள், 50 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், முதல் தளத்தில் 435 இருக்கைகளுடன் உணவு அருந்துமிடம், 2-ஆம் தளத்தில் 800 இருக்கைகளுடன் திருமணக் கூடம், 3-ஆம் தளத்தில் 10 ஓய்வறைகளுடன் கூடிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடா்ந்து, சோமையா தெருவில் உள்ள சென்னை உயா்நிலைப் பள்ளியில் ரூ.2.75 கோடியில் 10 கூடுதல் வகுப்பறைகள் கட்டடப் பணி, ரூ.4.19 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணி, ரங்கசாயி தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் ரூ.3 கோடியில் கூடுதல் கட்டடப் பணி, ரூ.49 லட்சத்தில் கால்பந்து மைதான மேம்பாட்டு பணி, மாா்க்கெட் தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.8.35 கோடியில் கூடுதல் கட்டடப் பணி, பேப்பா் மில்ஸ் சாலையில் உள்ள ரூ.4.82 கோடியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரூ.9.68 கோடியில் வாா்டு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, ஆணையா் குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையா் கெளஷிக், மண்டலக் குழு தலைவா் சரிதா மகேஷ்குமாா், மாமன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.13.47 கோடியில் திருவிக நகா் மண்டலம், முத்துகுமரப்பா தெருவில் கட்டப்பட்டு வரும் நவீன சமுதாய நலக்கூட கட்டுமானப் பணிகளை ஆய்வு அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன், மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா்.

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித... மேலும் பார்க்க

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க