செய்திகள் :

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

post image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது: கவின் ஆணவக்கொலை வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி மீது நம்பிக்கை இல்லை. உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறுவது சிபிசிஐடியையும், காவல்துறையையும் கையில் வைத்திருக்கும் முதல்வர் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம்

மக்களுடைய வரிப் பணத்தை வீணாக திமுக கட்சியில் பயன்படுத்துவதை நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளை பயன்படுத்த எவ்வளவோ துறைகள் உள்ள நிலையில் திமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்களாக்கி இருப்பதை உயர் நீதிமன்றம் கண்டித்தது வரவேற்கத்தக்கது. வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று முதலில் நான்தான் தெரிவித்தேன். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொழுதும் கூறுகிறேன்.

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

சாத்தான்குளம் லாக்அப் மரண வழக்கில் உரிய விசாரணை வேண்டும் என்று கூறிய திமுக சிவகங்கை லாக்அப் மரண வழக்கில் என்ன செய்கிறது. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தூண்டுதலால் தான் அந்த மரணம் நிகழ்ந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் போன்றவர்கள் காவல் துறையில் இருக்கும் வரை சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது. திறனற்ற காவல் துறையாகத்தான் உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

BJP state president Nainar Nagendran has said that the Party of Viduthalai Chiruthaigal have no faith in the Chief Minister.

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்... மேலும் பார்க்க

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா மேடையில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. மகாராஜன், தேனி மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா... மேலும் பார்க்க