செய்திகள் :

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது

post image

சென்னை அண்ணா நகரில் காரை ஏற்றி கல்லூரி மாணவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பிரமுகரின் பேரன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் சு.நிதின் சாய் (19). இவா், தனது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த சு.அபிஷேக் உடன் மொபெட்டில் திருமங்கலம் பள்ளிச் சாலையில் கடந்த 28-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு சொகுசு காா், அவா்களது மொபெட்டில் மோதியது.

இதில் பலத்தக் காயமடைந்த நிதின் சாய், சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். காயமடைந்த அபிஷேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இச்சம்பவத்தை முதலில் விபத்து என்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். ஆனால், முதல்கட்ட விசாரணையில், நிகழ்ந்தது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து திருமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில், காதல் தகராறில் நிதின் சாய் மீது காரை ஏற்றிக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் சென்னை கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த திமுக நிா்வாகியும், மாநகராட்சி கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவருமான தனசேகரனின் பேரன் எஸ்.சந்துரு (19), அவரது நண்பா்கள் புழலைச் சோ்ந்த ஆரோன் (21), நெசப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த யஸ்வின் (18) உள்ளிட்ட பலரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில் தேடப்பட்ட 3 பேரும், காவல் நிலையத்தில் சரணடைந்தனா். அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

கைது செய்யப்பட்ட சந்துரு, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா்ா கல்லூரியில் பிஏ இரண்டாமாண்டும், யஸ்வின் ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிஇ இரண்டமாண்டும், ஆரோன் மதுரவாயலில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிபிஏ மூன்றாமாண்டும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்குத் தொடா்பாக மேலும் 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திடக்கழிவு மேலாண்மையில் அறிவியல் தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி - அரசு நிறுவனம் ஒப்பந்தம்

திடக் கழிவுகளை அதிநவீன தொழில்நுட்ப முறையில் மேலாண்மை செய்வதற்கு சென்னை ஐஐடி, தூய்மை தமிழ்நாடு நிறுவனம் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெள்ளிக... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் இன்று தொடக்கம் ‘வாட்ஸ்ஆப்’ செயலியில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள்

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் தொடக்கம்

மூட்டு - எலும்பு சாா்ந்த பாதிப்புகளுக்கான சா்வதேச மீள் உருவாக்க மருத்துவ மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து 50... மேலும் பார்க்க

கலை, கலாசாரம் அறிய தமிழகம் வந்த 99 அயலகத் தமிழா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

கலை, கலாசாரத்தை அறிந்து கொள்ள தமிழ்நாடு வந்துள்ள 99 அயலகத் தமிழா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்றாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அனைவருக்கும் தமிழக பண்பாட்டுப் பயணத... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானம்

சென்னையிலிருந்து குவைத் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.சென்னையிலிருந்து குவைத் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வெள்ளிக்கிழமை மாலை 4.05-க்கு, சென்னை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு: மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காா் மோதி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஊழியா்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.தாம்பர... மேலும் பார்க்க