செய்திகள் :

பழங்குடி லாக்அப் மரணம்; வனத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் - பின்னணி என்ன?

post image

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). முதுவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாரிமுத்து மீது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கஞ்சா கடத்தியது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணையில் போதிய ஆதாரம் இல்லாததால் கடந்த 29-ஆம் தேதி மாரிமுத்துவை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 29-ஆம் தேதி மாலை, மூணாறுக்கு பேருந்தில் சென்ற மாரிமுத்துவை சிறுத்தைப் பல் கடத்தியதாக வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகத்தில் உள்ள கழிவறையில் மாரிமுத்து மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாரிமுத்து

29-ஆம் தேதி இரவு முழுவதும் வனத்துறை அதிகாரிகள் மாரிமுத்துவை தாக்கி உள்ளனர். இதில், பலத்த காயமடைந்த மாரிமுத்து உயிரிழந்துள்ளார். இதை மூடிமறைக்க அவர் கழிவறைக்குச் சென்றதாகவும், அப்போது, அங்குள்ள கம்பியில் வேஷ்டியைக் கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மாரிமுத்து கொலை தொடர்பாக தமிழக அரசு சிபிசிஐடி விசாரணை உத்தரவிட வேண்டும். அத்துடன் வனத்துறை ஊழியர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதுவரை மாரிமுத்துவின் உடலை வாங்கப்போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் உடுமலைப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நடுவர் நித்யகலா ஆய்வு மேற்கொண்டார். அதில், வனச்சரக அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள், மாரிமுத்து உயிரிழந்து கிடந்த கழிவறை ஆகியவற்றை ஆய்வு செய்த நீதிபதி நித்யகலா, மாரிமுத்துவை விசாரணை செய்த வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார்.

பணியிடை நீக்கம்

தொடர்ந்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீதிபதி நித்யகலா முன்னிலையில், மாரிமுத்துவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் இருந்து மாரிமுத்துவின் உறவினர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாரிமுத்துவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில், மாரிமுத்துவை அழைத்துச் சென்று விசாரணை நடத்திய வனவர் நிமல், வனக்காவலர் செந்தில்குமார் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உடுமலைப்பேட்டை வனச்சரகர் வாசு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல்: கிணற்று நீரால் கிராமத்தில் பரவும் தோல் நோய்; குடிநீருக்காக ஊர் விட்டு ஊர் போகும் அவலம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பெருமாள்கோவில்பட்டியில் உள்ள மக்கள் குடிநீருக்காக அங்கு உள்ளகிணற்று நீரையே நம்பியிருந்தனர். தற்போது கிணற்று நீர் சுகாதாரமானதாக இல்லை. அந்த நீரைக் குடித்ததால் தோல் சார்... மேலும் பார்க்க

"இந்தியாதான் அமெரிக்காவையே வழிநடத்துகிறது" - ட்ரம்ப் பேச்சு குறித்து அண்ணாமலை

சென்னை IIT- நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து பேசியிருக்கும் பாஜக அண்ணாமலை, "கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கலந... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: "நோயாளிகளை மருத்துவப் பயனாளிகள் என அழையுங்கள்" - முதல்வர் கோரிக்கை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இன்று (ஆகஸ்ட் 2) இந்த மருத்துவ முகாம் திட்டத்தினை ... மேலும் பார்க்க

Vantara: கோவில் யானை அம்பானியின் வந்தாரா பூங்காவிற்கு மாற்றம்; மகாராஷ்டிராவில் வெடிக்கும் போராட்டம்!

மகாரஷ்டிரா, கோலாப்பூரின் நந்தினி மடத்தின் 36 வயது கோவில் யானையான 'மகாதேவி (மதுரி)', அம்பானியின் 'வந்தாரா' உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது பெரும் பேசுபொருளாகி வருகிறது. 1992ம் ஆண்டு முதல் அந்த மடத்... மேலும் பார்க்க

`சிபிசிஐடி விசாரிக்கக் கூடாது; போலீஸுக்கு அடிப்படை அறிவு இல்லையா?’ - கவின்குமார் விவகாரத்தில் திருமா

கவின்குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காவல்துறை அதிகாரிகளை மிகக் கடுமையான விமர்சித்த அக்கட்சியின் தலைவர் ... மேலும் பார்க்க

பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம்? - பொதுப்பணித்துறை, வனத்துறை குழப்பம்; வேல்முருகன் சொல்வதென்ன?

தென்காசி மாவட்டத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் தென்காசி அரசு மருத்துவமனை, தென்காசி புதிய பேருந்து நிலையம், மேக்கரை அடவிநயி... மேலும் பார்க்க