செய்திகள் :

Vantara: கோவில் யானை அம்பானியின் வந்தாரா பூங்காவிற்கு மாற்றம்; மகாராஷ்டிராவில் வெடிக்கும் போராட்டம்!

post image

மகாரஷ்டிரா, கோலாப்பூரின் நந்தினி மடத்தின் 36 வயது கோவில் யானையான 'மகாதேவி (மதுரி)', அம்பானியின் 'வந்தாரா' உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது பெரும் பேசுபொருளாகி வருகிறது.

1992ம் ஆண்டு முதல் அந்த மடத்தில் வளர்க்கப்பட்டு, ஊர்வலம், கோவில் விழாக்களில் பங்கேற்பது என மகாதேவி யானை பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விலங்கு உரிமைகள் அமைப்பான 'PETA' அதிகமான சுமை, ஊர்வலங்களில் மூன்று நான்கு பேர் ஏறிக்கொண்டு போவது, பிச்சை எடுக்க வைப்பது என மாகதேவி யானையை துன்புறுத்துவதாகவும், அதன் கால்கள் பாதிக்கப்பட்டு நோய் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. மேலும், துன்புறுத்தலுக்கும், பாதிப்பிற்கும் உள்ளாகியிருக்கும் மகாதேவி யானையை மறுவாழ்வு மையத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது.

வைரலாகும் கார்டூன்

'PETA' போட்ட இந்த வழக்கு பல மாதங்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டுமே 'மகாதேவி யானையை மீட்டு, மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும்' என உத்தரவிட்டிருக்கிறது.

இதையடுத்து ஆனந்த் அம்பானி நடத்தி வரும் 'வந்தாரா' உயிரியல் பூங்காவிற்கு மகாதேவி யானை மாற்றப்பட்டிருக்கிறது. இதுதான் இப்போது மகாராஷ்டிரா ஜெயின் சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெயின் சமூகத்தினர், 'யானையை துன்புறுத்தவில்லை. அது எங்கள் கோவிலில் அன்புடன் வளர்க்கப்பட்ட கோவில் யானை. அதை மீட்டெடுக்க வேண்டும்' என்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, ஆனந்த் அம்பானியின் 'வந்தாரா'விற்கு மாற்றப்பட்டிருக்கும் மகாதேவி யானையை, அரசின் உயிரியல் விலங்கு மறுவாழ்வு பூங்காவிற்கு மாற்றவேண்டும் எனவும் வலுத்தக் கோரிக்கைகளை முன்வைத்துப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதுதொடர்பாக 24 மணிநேரத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துகளைப் பெற்று, கோரிக்கைகளை பிரதமரின் அலுவலகத்திற்கு அனுப்பப் போவதாகக் கூறுகின்றனர். கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருக்கும் ஜெயின் தலைவர்களைச் சந்தித்து, அவர்கள் மூலம் அரசிற்கு அழுத்தம் கொடுக்கவும் போராட்டங்களை முன்னெடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆனந்த் அம்பானி திருமண விழாவில் நிற்கும் யானை

ஆனந்த் அம்பானியின் 'வந்தாரா' பூங்காவில் இருக்கும் மகாதேவி யானையை மீட்பதற்காக 'ஜியோ' சிம்களை, சாதனங்களை, பொருட்களை புறக்கணிக்கப் போவதாகவும் 'Boycott Jio products' என்ற போராட்டத்தையும் தீவிரமாக நடத்தப்போவதாகவும் ஜெயின் சமூகத்தினர் கூறுகின்றனர்.

மகாதேவி யானையை மீட்கும் கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை தீவிர போராட்டத்தை முன்னெடுக்கவும் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போராட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெடித்து நாடுமுழுவதும் இந்த விவகாரம் பேசுபொருளாக ஆரம்பித்திருக்கின்றது.

`சிபிசிஐடி விசாரிக்கக் கூடாது; போலீஸுக்கு அடிப்படை அறிவு இல்லையா?’ - கவின்குமார் விவகாரத்தில் திருமா

கவின்குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காவல்துறை அதிகாரிகளை மிகக் கடுமையான விமர்சித்த அக்கட்சியின் தலைவர் ... மேலும் பார்க்க

பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம்? - பொதுப்பணித்துறை, வனத்துறை குழப்பம்; வேல்முருகன் சொல்வதென்ன?

தென்காசி மாவட்டத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் தென்காசி அரசு மருத்துவமனை, தென்காசி புதிய பேருந்து நிலையம், மேக்கரை அடவிநயி... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், பணியிலிருந்து ஓய்வுபெறும் கடைசி நாளில் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.நாகர்கோவிலைச் சேர்ந்த வேல்ராஜ் 1992-ம் ஆண்டு... மேலும் பார்க்க

Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷனுக்கு ஒரு விசிட்!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2025-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களுக்குக் கிடைத்த முதல் அனுபவமே காவல் நிலையத்தில் தான்! ஒரு மாலை நேரத்தில் சென்னையோட முக்கிய நகரமான திருவல்லிக்கேணியில் இருக்கிற D1 ... மேலும் பார்க்க

OPS: "தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் எதுவும் நடக்கலாம்"-மு.க.ஸ்டாலின் சந்திப்புக் குறித்து ஓ.பி.எஸ்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை அடையாறு பார்க்கில் வாக்கிங் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அடுத்த சில மணிநேரங்களில், அவரின் அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக் ... மேலும் பார்க்க

"ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம்; ஒன்றிய அரசுகூட கேட்டது, ஆனால், தமிழ்நாடு அரசு..!" - திருமா

நெல்லையில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். கவின் ஆணவப்படுகொலை தொடர்பாக பேசியிருக்கும் விசிக தலைவர் திருமாவளவன்... மேலும் பார்க்க