செய்திகள் :

MP: காணாமல் போன 23,000 பெண்கள்; 1,500 குற்றவாளிகள் தலைமறைவு - அதிர்ச்சி தகவல்கள்!

post image

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2024 ஜூலை முதல் 2025 ஜுன் வரையிலான காலகட்டத்தில் 23000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

ம.பி சட்டமன்றம் விதன சபாவில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் முன்னாள் உள்துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பாலா பச்சன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மாநில பாஜக அரசு கூறிய தகவல்கள் நாடுமுழுவதும் அதிர்ச்சையை எழுப்பியிருக்கிறது.

MP: காணாமல் போன 23,000 பெண்கள்
MP: காணாமல் போன 23,000 பெண்கள்

காணமல் போனவர்களில் 21000க்கும் மேற்பட்ட பெண்களும் 1900க்கும் மேற்பட்ட சிறுமிகளும் அடங்குவார்கள்.

30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 500க்கும் மேலாக இருப்பது தெரியவந்துள்ளது.

மாநிலத்தின் அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரம் போபால், வணிக தலைநகரம் இந்தூர், கலாச்சார மற்றும் நீதித்துறை தலைநகரம் ஜபல்பூர், சாகர், குவாலியர், சத்தர்பூர், தார் மற்றும் ரேவா மாவட்டங்களும் இந்த பட்டியலில் அடங்கும்.

பழங்குடிகள் அதிகமிருக்கும் மாவட்டங்கள் முதல் முக்கிய நகரங்கள் வரை மாநிலம் முழுவதுமே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பரவியிருப்பது இந்த தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

MP CM Mohan Yadav
MP CM Mohan Yadav

முக்கியமாக பாலியல் வன்கொடுமை, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 1500க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை என மாநில அரசுக் கூறியிருக்கிறது. மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போன வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்ட பலர் பிடிபடவில்லை.

பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 292 குற்றவாளிகள் தலைமறைவாகியிருக்கின்றனர். போலவே சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை/தாக்குதலில் ஈடுபட்ட 282 பேர் தலைமறைவாக உள்ளனர்.

பெண்கள் மீதான பிற பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 443 பேரும் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களில் 197 பேரையும் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை.

காணாமல் போன வழக்குகளைப் பொறுத்தவரையில், பெண்கள் தொடர்பானவற்றில் 76 குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர், அதே நேரத்தில் மைனர் சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்குகளில் 254 பேர் தலைமறைவாக உள்ளனர்.

ஜூஸில் பூச்சிமருந்து கலந்து ஆண் நண்பனைக் கொன்று நாடகம்; கிரீஷ்மா பாணியில் அதிரவைத்த இளம்பெண்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பிண்டிமன பகுதியைச் சேர்ந்தவர் அதீனா(30). இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் போலீஸுக்கு போன்செய்து, தனது வீட்டுக்கு அருகே விஷம் குடித்த நிலையில் ஒருவர் மயங்... மேலும் பார்க்க

கூட்டநெரிசலைப் பயன்படுத்தி `பிக்-பாக்கெட்' முயற்சி; மடக்கி பிடித்த மக்களால் சிக்கிய வடமாநில பெண்கள்!

சென்னை, சைதாப்பேட்டை, அப்பாவு நகர் பகுதியில் வசித்து வரும் சரவணன், 48 என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் (31.07.2025) நேற்று முன்தினம் மதியம் தி.நகர், போத்திஸ் துணி கடை முன்பு நடந்து சென்று கொ... மேலும் பார்க்க

திருநங்கை என்பதால் ஆத்திரம்; சொந்த தம்பியே கொலை செய்ய துணிந்த கொடூரம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திநகர் பகுதியைச் சேரந்தவர் ஆறுமுகம் - கீதா தம்பதி. இவர்களுக்கு மணிகண்டன் , அமர்நாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டனுக்கு சிறு வயதிலேயே ஏற்பட்ட உடல் மாற்றம் காரணம... மேலும் பார்க்க

15 ஆண்டுகளில் 8 பேருடன் திருமணம்; பணம்பறிப்பு - 9வது திருமணத்தின் போது சிக்கிய ஆசிரியை

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பணக்காரர்கள் சிலரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து ஒரு பெண் பணம் பறிப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசார... மேலும் பார்க்க

கர்நாடகா: அரசு சம்பளம் ரூ.15,000... ஆனால் 24 வீடுகள், ரூ.30 கோடி சொத்து! - சிக்கிய முன்னாள் ஊழியர்!

கர்நாடகாவின் லஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு கண்காணிப்பு அமைப்பான லோக்தாயுக்தா அதிகாரிகள், கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (KRIDL) முன்னாள் எழுத்தர் வீட்டை சோதனை செய்தபோது கணக்கில்... மேலும் பார்க்க

Anil Ambani: ரூ.3000 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி; அனில் அம்பானியை விசாரிக்கும் ED; பின்னணி என்ன?

யெஸ் வங்கியில் ரூ.3000 கோடி கடன் வாங்கி அதனைத் திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.2017-19ம் ஆண்டுகளில் அனில் அம்பானியின் ... மேலும் பார்க்க