செய்திகள் :

Anil Ambani: ரூ.3000 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி; அனில் அம்பானியை விசாரிக்கும் ED; பின்னணி என்ன?

post image

யெஸ் வங்கியில் ரூ.3000 கோடி கடன் வாங்கி அதனைத் திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2017-19ம் ஆண்டுகளில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் இக்கடனை வாங்கியது. கடன் வாங்குவதற்காக வங்கி அதிகாரிகளுக்கு ரிலையன்ஸ் அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இம்மோசடி தொடர்பாக சி.பி.ஐ. இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. இதையடுத்து கடந்த வாரம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இம்மோசடி தொடர்பாக நாடு முழுவதும் ரெய்டு நடத்தியது.

மும்பை, டெல்லி போன்ற இடங்களில் நடத்தப்பட்ட இந்த ரெய்டு 3 நாட்கள் நீடித்தது. இதில் அனில் அம்பானிக்கு வேண்டப்பட்ட 25 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த ரெய்டில் அனில் அம்பானிக்கு எதிராகப் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. விசாரணையில் யெஸ் வங்கி அதிகாரிகள், ரிலையன்ஸ் குரூப் நிர்வாகம் கடனுக்காகக் கொடுத்த ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல், ஏற்கனவே கடன் இருக்கும் நிலையில் புதிய கடன் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இக்கடன் கொடுக்கும் முன்பே வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

anil ambani - அனில் அம்பானி
anil ambani - அனில் அம்பானி

தற்போது ரெய்டு நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக அனில் அம்பானியை விசாரணைக்கு வரும் 5ம் தேதி நேரில் ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. அன்றைய தினம் அனில் அம்பானியைக் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே அனில் அம்பானி நிறுவனம் ரூ.68 கோடி அளவுக்கு சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவிற்குப் போலி வங்கி உத்தரவாதம் கொடுத்தது தொடர்பாக புபனேஷ்வர் மற்றும் கொல்கத்தாவில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். இதனால் அனில் அம்பானிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கர்நாடகா: அரசு சம்பளம் ரூ.15,000... ஆனால் 24 வீடுகள், ரூ.30 கோடி சொத்து! - சிக்கிய முன்னாள் ஊழியர்!

கர்நாடகாவின் லஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு கண்காணிப்பு அமைப்பான லோக்தாயுக்தா அதிகாரிகள், கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (KRIDL) முன்னாள் எழுத்தர் வீட்டை சோதனை செய்தபோது கணக்கில்... மேலும் பார்க்க

சென்னை: இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது; என்ன நடந்தது?

சென்னை, வேப்பேரியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் பைக் டாக்ஸி ஓட்டுநர் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட பெண் ஊபர் மூலம் பைக்... மேலும் பார்க்க

8 ஆம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த 40 வயது பள்ளி ஆசிரியர்- தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

40 வயதுடைய பள்ளி ஆசிரியர் ஒருவர், 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், தெ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: தொழிலாளி படுகொலை; புரோட்டாவிற்கு சால்ணா கேட்டதால் தகராறா? -போலீஸ் தீவிர விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சேது நகர் பகுதியை சேர்ந்தவர் களஞ்சியம் (49). மீனவரான இவர் அவ்வப்போது பல்வேறு கூலி வேலைகளும் செய்து வருபவர். கடந்த சில நாள்களுக்கு முன் இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வ... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலை: கவின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் - அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின் குமாரும், திருநெல்வேலியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் சரவணன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகளும் காதலித்து வந்த நிலையில், அவரின் சகோதரர் சுர்ஜித் ஜூலை 27-ம்... மேலும் பார்க்க

நெல்லை: ”விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்” – கனிமொழி MP

திருநெல்வேலியில் கடந்த 27-ம் தேதி ஐ.டி ஊழியரான கவின்குமார் ஆணவக் கொலைவின் காரணமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே இந்தக்... மேலும் பார்க்க