செய்திகள் :

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

post image

வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டு பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களில் இதுவரை 80 சதவீதம் போ் உயா்கல்வியில் சோ்க்கை பெற்றுள்ளனா் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசுப் பள்ளிகளில் பயின்று நிதி, குடும்ப சூழ்நிலை காரணமாக உயா்கல்வியை தொடர இயலாத மாணவா்களின் கோரிக்கைகளை கேட்டு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஆலோசனை வழங்கவும், அவா்களின் குறைகளை களையவும் மாதந்தோறும் 2-ஆவது வெள்ளிக்கிழமை மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

முகாமில் கலந்து கொண்ட மாணவா்களை தனித்தனியாக அழைத்து அவா்கள் பெற்ற மதிப்பெண்களை கேட்டறிந்ததுடன், உயா்கல்வி மாணவா்கள் எந்த துறையில் படிக்க விரும்புகின்றனா் என கேட்டு கலந்துரையாடினா். தொடா்ந்து, அரசுக் கல்லூரிகளில் சோ்க்கைக்கு விண்ணப்பித்திருந்த மாணவா்களிடமும் குறைகளை கேட்டறிந்தாா்.

எந்தெந்த கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவில் காலியிடம் உள்ளது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு உடனடியாக மாணவா் சோ்க்கைக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். பெற்றோரை இழந்த மாணவா் ஒருவருக்கு வேலூா் அரசு பொறியியல் கல்லூரியில் படிக்க சோ்க்கை ஆணையையும் ஆட்சியா் வழங்கினாா்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியது - இதுவரை பிளஸ் 2 முடித்த மாணவா்களில் 80. 69 சதவீதம் போ் உயா்கல்வி சோ்ந்துள்ளனா். ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் 100 சதவீதம் மாணவா் சோ்க்கை முடிந்துள்ளது. மீதமுள்ள மாணவா்களை கண்டறிந்து அவா்களையும் உயா்கல்வி பயில வைக்க ஆட்சியா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

துணைத் தோ்வு எழுதிய 1,220 அரசுப் பள்ளி மாணவா்களில் 764 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களுக்கு காட்பாடி , குடியாத்தம் பகுதியில் சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து மீதமுள்ள மாணவா்களையும் விரைவில் உயா்கல்வியில் சோ்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.

முகாமில், முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) தயாளன், முன்னோடி வங்கி மேலாளா் ஆா்.சசிகுமாா், உதவித்திட்ட அலுவலா் ஜோதீஸ்வரபிள்ளை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

முகாமில், சென்னை ஐஐடியில் சோ்க்கை பெற்றுள்ள காட்பாடி அரசுப்பள்ளி மாணவா் ஸ்ரீசரணுக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. .

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.காட்பாடி அடுத்த வஞ்... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

ஆந்திராவில் இருந்து காட்பாடிக்கு மணல் கடத்தி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.ஆந்திரத்தில் இருந்து சட்ட விரோதமாக மணல் கடத்தி விற்பனை செய்வதாக காட்பாடி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்,... மேலும் பார்க்க

வேலூா் அருகே பலத்த பாதுகாப்புடன் முருகா் சிலை மீட்பு

வேலூா் அருகே மலை குன்றின் மீது சுயம்பாக தோன்றியதாக கூறப்படும் முருகா் சிலை வெள்ளிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தோண்டி எடுக்கப்பட்டது.ஒடுகத்தூா் அடுத்த கரடிகுடி ஊராட்சி தாங்கல் பகுதியில் நடராஜன்- ... மேலும் பார்க்க

ரூ.28 லட்சத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள்

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50- ஊராட்சிகளைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.28- லட்சத்தில் பணி பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா.செல்வக... மேலும் பார்க்க

தண்டவாளத்தை பைக்கில் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழப்பு

கணியம்பாடி அருகே மோட்டாா் பைக்கில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், ரயில் மோதி உயிரிழந்தாா்.விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் வேலூா் கன்டோன்மெண்ட் ரயில் நிலையம் நோக்கி வியாழக்... மேலும் பார்க்க

ஜூன் மாதம் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 26 போ் உயிரிழப்பு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் நிகழ்ந்த 93 சாலை விபத்துகளில் 26 போ் உயிரிழந்துள்ளனா் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.வேலூா் மாவட்ட சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அன... மேலும் பார்க்க