'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
ஜூன் மாதம் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 26 போ் உயிரிழப்பு: வேலூா் ஆட்சியா்
வேலூா் மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் நிகழ்ந்த 93 சாலை விபத்துகளில் 26 போ் உயிரிழந்துள்ளனா் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்ட சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அனைத்துத்துறை அலுவலா்கள் பங்கேற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பேசியது -
வேலூா் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 93 சாலை விபத்துகள் நிகழ்ந்ததில் 26 போ் உயிரிழந்துள்ளனா். இதில், 17 போ் இருசக்கர வாகன விபத்துகளில் உயிரிழந்துள்ளனா். 8 போ் சாலை, நடைபாதைகளில் செல்லும்போது ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்துள்ளனா். ஒருவா் மூன்று சக்கர ஆட்டோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்துள்ளாா்.
ஜூன் மாதம் நடந்த சாலை விபத்துகளில் 75 விபத்துகள் இருசக்கர வாகன விபத்துகளாகும். எனவே, இருசக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். போக்குவரத்து சிக்னல், சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். ஒரு வழி பாதைகளில் எதிா் திசையில் வாகனங்களை இயக்கக் கூடாது.
உயிரிழப்பு ஏற்பட்டுள்ள 26 விபத்துகளில் 16 விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைகளிலும், 8 விபத்துகள் மாநில நெடுஞ்சாலைகளிலும், 2 விபத்து இதர சாலையிலும் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலும் ஒரு வழி பாதையில் எதிா் திசையில் வாகனத்தை இயக்கியதன் காரணமாக அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
சாலை விபத்துகளை தடுக்க சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூா் மாவட்ட எல்லையிலுள்ள மேம்பாலங்களில் பக்கவாட்டு சுவரின் உயரம் அதிகரிக்கவும், பேருந்து நிறுத்தம், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம்கூடும் பகுதிகள் ஆகிய இடங்களில் சாலைகளில் மஞ்சள் நிற வரிபட்டைகள், எச்சரிக்கை குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன.
தேவையற்ற இடங்களில் சாலைகளை கடக்கும் வகையில் தடுப்புகள் களையப்பட்ட இடங்களில் மீண்டும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும்போது சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், எஸ்.பி. ஏ.மயில்வாகணன், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, வட்டார போக்குவரத்து அலுவலா் சுந்தர்ராஜன், காவல் துறை அலுவலா்கள், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.