செய்திகள் :

"ஓ.பி.எஸ், முதல்வரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்திருப்பார்" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

post image

மதுரை விளாங்குடியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.

"அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் வெளியேறிவிட்டாரே" என்ற கேள்விக்கு,

"அவர் அதிமுக கூட்டணியில் எங்கே இருந்தார்" என்றார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

கூட்டணி குறித்த கேள்விக்கு,

"கூட்டணி என்பது இறுதிக்கட்டத்தில்தான் முடிவாகும். திமுக, அதிமுக-வில் அப்படித்தான் எப்போதும் நடக்கும். வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணியை அதிமுக பயன்படுத்தி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். மக்கள் கடல் அலை போல திரண்டு வருகின்றனர். மக்கள் கடலில் எடப்பாடி பழனிசாமி நீந்தி வருகிறார்.

2026-ல் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவது உறுதியாகிவிட்டது. கிராமப்புறங்களில் கூட மக்கள் எழுச்சிகரமான வரவேற்பு கொடுக்கிறார்கள். அதிமுக தான் ஆட்சிக்கு வர வேண்டும், முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

பாஜகவோடு கூட்டணியில் இருக்கிறோம். எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெரிய பெரிய கட்சிகளோடு பேசுகிறோம், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனக் கூறியுள்ளார். எது எப்படி இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

1967-ல் நடைபெற்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், சுதந்திரக் கட்சி உள்ளிட்ட முரண்பாடான கட்சிகள் கூட்டணி அமைத்தனர். அதுபோல தேர்தல் நேரத்தில்தான் எல்லாமே முடிவாகும். சீட் பேரம், தொகுதி ஒதுக்கீடு என எல்லாமே உள்ளது. தேர்தல் நேரத்தில் கேட்ட தொகுதிகள் கிடைக்காமல் போகலாம், கூட்டணி மாறலாம், இப்படி நிறைய விஷயங்கள் உள்ளது." என்றவரிடம்,

"முதல்வரை ஓபிஎஸ் சந்தித்துள்ளாரே" என்ற கேள்விக்கு,

"ஓபிஎஸ் முதல்வரை எத்தனை முறை பார்த்தாலும் அது அவருடைய கொள்கை, மரியாதை நிமித்தமாக தான் சந்தித்து இருப்பார்." என்றார்.

தி கேரளா ஸ்டோரி: `சங் பரிவார சித்தாந்த கதைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்' - பினராயி விஜயன் காட்டம்

2023ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 71வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு வெளியாகியிருக்கின்றன. அதில், இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்... மேலும் பார்க்க

OPS : `டார்கெட் லிஸிட்டில் பாஜக; நிரந்தர எதிரி இல்லை எனில்..!’ - ஓ.பி.எஸ்ஸின் அடுத்த திட்டம் என்ன?

பா.ஜ.க கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தபோதிலும், ஓபிஎஸ்-க்குத் தொடர்ந்து முக்கியத்துவம் மறுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்க அவர் பலமுறை முயற்சி செ... மேலும் பார்க்க

`6.5 கோடி வாக்காளர் + 2 கோடி வடவர்; அகதியாகும் தமிழர்கள்’ - தேர்தல் ஆணயத்துக்கு சீமான் கண்டனம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்புத் திருத்தம் வழியாக 6.5 லட்சம் பீகார் மக்கள் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் இணையக் கூடலாம் என்றும் நாடுமுழுவதும் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் தமிழகத்தில... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் பேசிய ராமதாஸ்: `தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’ - என்ன பேசினார்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் ராமதாஸிடம், இருவருக்குமான உரையாடல் குறித்தும், தேர்தல் கூட்டணியில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து... மேலும் பார்க்க

`ஓபிஎஸ் ஏன் இந்த முடிவை எடுத்தார்னு தெரியல; அவர் கேட்டிருந்தால்.!" - நயினார் நாகேந்திரன்

மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஏற்கனவே ஓபிஎஸ்ஸிடமும் தினகரனிடமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். சட்டமன்றத்தில் சந்... மேலும் பார்க்க

'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 முக்கிய செய்திகள்!

சௌதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் விழுந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.கேரளா பள்ளிகளில் ஒரு மாத விடுமுறையை வெயில் காலத்துக்கு பதில் மழைக் காலத்தில் அளிப்பது குறித்து மக்களிடம் கருத்த... மேலும் பார்க்க