செய்திகள் :

AI-யின் தாக்கமா? 4 முறை வேலையை இழந்த மென்பொருள் பொறியாளர் - என்ன காரணம் கூறுகிறார்?

post image

சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 59 வயதான மார்க் க்ரிகுயர் என்பவர் 28 ஆண்டுகளாக மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த 18 ஆண்டுகளில் நான்கு முறை அவர் தனது வேலையை இழந்துள்ளார். சமீபத்தில், வால்மார்ட் குளோபல் டெக் நிறுவனம் 1,500 பணியிடங்களைக் குறைத்தபோது, அவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப கால ஆர்வம்

மார்க்குக்கு 10 வயதாகும்போதே கணினி மீது ஆர்வம் தொடங்கியிருக்கிறது. புரோகிராம்களின் பிழைகளைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட அவர், 28 ஆண்டுகளுக்கு முன்பு மென்பொருள் துறையில் பணியைத் தொடங்கியிருக்கிறார். 2008-ல் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் தனது முதல் வேலை இழப்பைச் சந்தித்திருக்கிறார். இதுபோன்று நான்கு முறை வெவ்வேறு நிறுவனத்தில் வேலையை இழந்திருக்கிறார்.

AI-யின் பங்கு

செயற்கை நுண்ணறிவு மென்பொருள் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆனால், வேலை இழப்புகளுக்கு AI முக்கிய காரணம் இல்லை என மார்க் கருதுகிறார். AI வரும் காலங்களில் அதனையும் மாற்றும் என அவர் எச்சரிக்கிறார்.

வேலை இழப்பின் காரணங்கள்

”நிறுவனங்கள் வேகமாக அதிகமானவர்களைப் பணியமர்த்துகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றங்களைவிட, அதிகப்படியான பணியமர்த்தல் மற்றும் செலவு குறைப்பே வேலை இழப்புக்கு முக்கிய காரணங்கள்” என அவர் கூறியிருக்கிறார்.

தொழில்நுட்பத் துறையில் அனுபவமிக்கவர்களும் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.

உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?

கடந்த இரண்டு ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், மனிதர்களின் வேலைவாய்ப்புகள் குறைவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அ... மேலும் பார்க்க

UPI: இன்று முதல் யு.பி.ஐ-யில் அமலுக்கு வரும் 7 ரூல்ஸ்; என்னென்ன தெரிந்துகொள்வோமா?

இன்று ஆகஸ்ட் 1. இன்று முதல் யு.பி.ஐ-யில் (UPI) ஒரு சில மாற்றங்கள் வர உள்ளதாக முன்னர் தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்... வாங்க...யு.பி.ஐ பரிவர... மேலும் பார்க்க

Google: ரூ.50,000 கோடி; ஆந்திராவில் `ஆசியாவின்' மிகப்பெரிய Data Center; கூகுளின் ப்ளான் என்ன?

50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டரை (Data center.) ஆந்திராவில் அமைக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் 6 பில்லியன் டாலர்... மேலும் பார்க்க

`AI தொழில்நுட்பங்கள் எந்தெந்த தொழில்களை மாற்றியமைக்கும்?' - மைக்ரோசாப்ட் ஆய்வு சொல்வதென்ன?

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு, ஏஐயால் இயக்கப்படும் சாட்பாட் தொழில்நுட்பங்கள் எந்தெந்த தொழில்களை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.மைக்ரோசாப்டின் கோபைலட் (C... மேலும் பார்க்க

உஷார்: ``நல்லவேளை போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணீங்க; இல்லைனா ரூ.50,000 போயிருக்கும்'' - அனுபவ பகிர்வு

"என்னை மாதிரியே என் நண்பர் ஒருத்தர் சூப்பர் மார்க்கெட் வெச்சுருக்காரு. அவரு புதுக்கோட்டைய சேர்ந்தவரு. ஆனா, தமிழ்நாட்டுல இருக்க இன்னொரு ஊருல கடை வெச்சுருக்காரு. கடந்த சனிக்கிழமை, அவரோடு கடைப் போனுக்கு ... மேலும் பார்க்க

``பெரிய நிறுவனங்கள் அபாயங்களை மறைக்கின்றன'' - எச்சரிக்கும் Godfather of AI

செயற்கை நுண்ணறிவின் காட் ஃபாதர் எனக் கருதப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், அதன் வேகமான வளர்ச்சி ஏற்படுத்தும் ஆபத்துகளையும், பெரிய நிறுவனங்கள் அந்த ஆபத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பதன் விளைவுகளையும் குறித்து எச்... மேலும் பார்க்க