செய்திகள் :

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

post image

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் திமுக அரசு இருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ தளத்தில், தூத்துக்குடி மாவட்டம், பண்டுக்கரை பகுதியில், வீட்டின் அருகே கஞ்சா போதையில் பிரச்னை செய்தவர்களைத் தட்டிக்கேட்ட மாரிப்பாண்டி, அருள்ராஜ் ஆகிய இரண்டு சகோதரர்களை, போதைக் கும்பல் கடத்திச் சென்று, கொடூரமாகக் கொன்று, மண்ணில் புதைத்துள்ள செய்தி, நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. இதில், அருள்ராஜ், பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள், எங்கும் எளிதில் கிடைக்குமளவுக்குப் பெருமளவு அதிகரித்திருக்கின்றன. இதனால், பறிபோன உயிர்கள் ஏராளம். குறிப்பாக, கஞ்சா போதையில், பல கொலைகள் நடந்திருக்கின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கியக் காரணமாகக் கஞ்சா புழக்கம் இருக்கிறது.

ஆனால், தமிழக அரசு, கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை முதல் குமரி வரை, எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அங்கே கஞ்சா விற்பனை கோலோச்சுகிறது. தமிழக அரசுக்கோ, காவல்துறைக்கோ தெரியாமல் கஞ்சா விற்பனை நடக்கிறது என்பதைக் குழந்தைகள் கூட நம்ப மாட்டார்கள்.

தனது கட்சிக்காரர்கள் பணம் சம்பாதிக்க, கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக அரசு. இதனால் பாதிக்கப்படுவது சாதாரண பொதுமக்களே.

கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம், விழுப்புரம் சூப்பர் மார்க்கெட் ஒன்றில், இப்ராஹிம் என்பவர் கஞ்சா போதை ஆசாமிகளால் கொல்லப்பட்டது, கோவை, சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கஞ்சா போதையில் புவனேஷ்குமார் என்ற கல்லூரி மாணவனைக் கொலை செய்தது, கஞ்சா வியாபாரப் போட்டி காரணமாக, சென்னை கொடுங்கையூரில் பிரபல ரௌடி கருப்பா என்ற ரகுபதி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டது, கடந்த ஆண்டு, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் கஞ்சா கும்பலால் கொலை செய்யப்பட்டது, பெருங்களத்தூரில், கஞ்சா விற்பனைப் போட்டி காரணமாக இரட்டைக் கொலை, கடந்த ஜூன் மாதம், திருத்தணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் கொலை என, கஞ்சா புழக்கத்தால் கடந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற படுகொலைகளுக்குக் கணக்கே இல்லை.

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

தினமும் காலையில் கிளம்பி ஷூட்டிங் நடத்தச் சென்று கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா? தன் வீடு, தன் குடும்பம் என்பது மட்டுமே நோக்கம் என்று வாழும் உங்கள் கையாலாகாத்தனத்தால் எத்தனை உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன என்பது தெரியுமா?. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Former BJP leader Annamalai has said that the DMK government is turning a blind eye to the sale of drugs, including cannabis.

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உய... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் திருட்டு: மத்திய பிரதேச பெண்கள் 4 போ் கைது

கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டதாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.சைதாப்பேட்டை, அப்பாவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (48). இவா், அந்தப் பகுதியில் இரும்புக... மேலும் பார்க்க