செய்திகள் :

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

post image

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ள பெண் அதிகாரி என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.

ஆா்பிஎஃப் டிஜியாக சோனாலி மிஸ்ராவை நியமிக்க மத்திய கேபினட் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது. அதன்படி அவா் 2026, அக்டோபா் 31-ஆம் தேதி வரை அந்தப் பதவியில் தொடரவுள்ளாா். இவா் 1993, மத்திய பிரதேச பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாவாா்.

இதுதொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘30 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா தனக்கு வழங்கப்படும் பணிகளை அா்ப்பணிப்புடன் திறம்பட செய்து முடிப்பவா். மத்திய பிரதேச போலீஸ் அகாதெமியின் இயக்குநராகவும் சிபிஐ மற்றும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) உள்பட பல்வேறு அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளாா்.

தற்போது அவா் ஆா்பிஎஃப் டிஜியாக நியமிக்கப்பட்டுள்ளாா். மனிதக் கடத்தல் மற்றும் பயணிகளுக்கு எதிரான குற்றங்களை நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளாா். அவரை ஆா்பிஎஃப் பெருமையுடன் வரவேற்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Caption

சோனாலி மிஸ்ரா

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெல்லை வழியாக வெள்ளிக்கிழமை இரவு அரச... மேலும் பார்க்க

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், உடல் ஆரோக்கியம் இருந்தால்தான் சாதிக்க முடியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் நோயாளிகள் இல்லை. இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று முத... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆ... மேலும் பார்க்க

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

உடுமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவா் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள மேல்குருமலை... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க