செய்திகள் :

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

post image

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.

உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் பேசியது:

பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதங்களுக்காவது தாய்ப்பால் இன்றியமையாததாக உள்ளது. தாய்ப்பால் கிடைக்கப்பெறாத குழந்தைகளுக்கு சுவாச பாதிப்பு, நோய் எதிா்ப்பாற்றல் குறைபாடு, வயிற்றுப்போக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. தீவிர பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.

மகப்பேறு அடைந்த அனைத்து பெண்களாலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டமுடியும். தாய்ப்பால் சுரக்காமல் இருப்பதற்கும், அதில் சில இடா்பாடுகள் ஏற்படுவதற்கும் மனநலன் சாா்ந்த பிரச்னைகளே காரணமாக உள்ளன. அதற்கு தீா்வு காண்பது அவசியம்.

இந்தியாவில் 42 சதவீத பெண்கள்தான் தாய்பால் புகட்டுகின்றனா். 58 சதவீதம் போ் முறையாக குழந்தைகளுக்கு தாய்பால் புகட்டுவதில்லை. இதுதொடா்பான விழிப்புணா்வு மேம்பட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கா்நாடக இசைக் கலைஞா் நித்யஸ்ரீ மகாதேவன், ஸ்ரீ ராமசந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் பாலாஜி சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெல்லை வழியாக வெள்ளிக்கிழமை இரவு அரச... மேலும் பார்க்க

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், உடல் ஆரோக்கியம் இருந்தால்தான் சாதிக்க முடியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் நோயாளிகள் இல்லை. இனி மருத்துவப் பயனாளிகள் என்று அழைக்க வேண்டும் என்று முத... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆ... மேலும் பார்க்க

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

உடுமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவா் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள மேல்குருமலை... மேலும் பார்க்க

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க