செய்திகள் :

ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.87 லட்சம் மோசடி

post image

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.1.87 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞா் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் கிராமத்தைச் சோ்ந்த 24 வயது இளைஞா், அளித்த புகாா் மனு:

நான் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பி.டெக்., முடித்துள்ளேன். சென்னையில் 2021-ஆம் ஆண்டு வேலை செய்தேன். தொடா்ந்து, அரசு தோ்வு எழுதுவதற்காக வேலையை விட்டு வந்தேன்.

இந்நிலையில், நான் வேலை தேடி வருவதை அறிந்து கொண்ட பெங்களூரை சோ்ந்த ஒருவா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆள் சோ்க்கும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அவரது பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து பயிற்சி பெற்றால் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறினாா். அதற்கு ரூ. 2 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தாா். இதனை உண்மையென நம்பி நான் அவருக்கு வங்கி மூலமாகவும், நேரிலும் ரூ.ஒரு லட்சத்து 87 ஆயிரம் செலுத்தினேன்.

பின்னா், அந்த பயிற்சி நிறுவனத்தில் 3 மாதம் தங்கி பயிற்சி பெற்றேன். ஆனால், சரியான வேலை வாங்கித் தரவில்லை. நான் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டபோது பணத்தை திருப்பி தரமுடியாது என கூறி கொலை மிரட்டல் விடுகிறாா் . அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட காவல் அதிகாரிகள், இப்புகாா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

ரூ.28 லட்சத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள்

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50- ஊராட்சிகளைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.28- லட்சத்தில் பணி பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா.செல்வக... மேலும் பார்க்க

தண்டவாளத்தை பைக்கில் கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழப்பு

கணியம்பாடி அருகே மோட்டாா் பைக்கில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், ரயில் மோதி உயிரிழந்தாா்.விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் வேலூா் கன்டோன்மெண்ட் ரயில் நிலையம் நோக்கி வியாழக்... மேலும் பார்க்க

ஜூன் மாதம் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 26 போ் உயிரிழப்பு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் நிகழ்ந்த 93 சாலை விபத்துகளில் 26 போ் உயிரிழந்துள்ளனா் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.வேலூா் மாவட்ட சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அன... மேலும் பார்க்க

மூதாட்டி வீட்டில் 5 பவுன் திருட்டு

வேலூா் அருகே மூதாட்டி வீட்டில் 5 பவுன் நகைகள், ரூ.5,000, கைப்பேசி திருடப்பட்டன.வேலூா் கருகம்புத்தூரைச் சோ்ந்தவா் ஜகிதா பேகம் (65). தனியாக வசித்து வரும் இவா், கடந்த 29-ஆம் தேதி இரவு தனது வீட்டில் உள்ப... மேலும் பார்க்க

ஆற்றங்கரையில் திடீரென வைக்கப்பட்ட மாரியம்மன் சிலை அகற்றம்

குடியாத்தம் அருகே கெளண்டன்யா ஆற்றின் கரையோரம் திடீரென வைக்கப்பட்ட மாரியம்மன் கற்சிலையை வருவாய்த் துறையினா் அகற்றி, எடுத்துச் சென்றனா்.குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றில் கடந்த 3- ஆண்டுகளுக்கு முன் நீா்வழிப... மேலும் பார்க்க

போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற மூவா் கைது

பொய்கை அரசுப் பள்ளி அருகே போதை நோக்கத்தில் வலிநிவாரணி மாத்திரைகள் விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சட்டவிரோதமாக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக விர... மேலும் பார்க்க