செய்திகள் :

2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலி: மத்திய அரசு

post image

இந்தியாவில் 2020-24 வரை புலி தாக்குதல்களால் 378 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், 2022 ஆம் ஆண்டில் புலி தாக்குதல்களில் 110 பேர் பலியாகினர். ஐந்து ஆண்டுகளில் இதுவே அதிகபட்சம் என்று கூறினார்.

அதேசமயம் பலி எண்ணிக்கை 2020இல் 51, 2021 இல் 59, 2023 இல் 85 மற்றும் 2024 இல் 73 ஆகவும் இருந்தது.

குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் புலி தாக்குதல்களால் அதிக பலி எண்ணிக்கை நிகழ்ந்துள்ளன. ஐந்து ஆண்டுகளில் அங்கு 218 பேர் பலியாகியுள்ளனர். 2022 இல் மட்டும் மாநிலத்தில் 82 பேர் பலியாகியுள்ளனர்.

பாமக பொதுக்குழுக் கூட்டம்: அன்புமணி அழைப்பு

இதற்கு அடுத்த இடத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளது. புலி தாக்குதல்களால் 61 பேர் பலியாகியுள்ளனர். அதில் 2023இல் 25 பேர் பலியாகியுள்ளனர். புலிகள் காப்பகங்களுக்கு பெயர்பெற்ற மத்தியப் பிரதேசம், இதே காலகட்டத்தில் 32 பேர் பலியாகியிருப்பது தெரிய வந்ததுள்ளது.

அசாம், சத்தீஸ்கர், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளன.

அதே நேரத்தில் ஒடிசா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்களில் எந்த பலி எண்ணிக்கையும் பதிவு செய்யப்படவில்லை.

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.நாட்டின் சு... மேலும் பார்க்க