செய்திகள் :

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

post image

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை பறிமுதல் செய்தது.

தெலங்கானா முதல்வராக கே.சி. சந்திரசேகர ராவ் இருந்தபோது 2017-இல் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தில் பயனாளிகள் ஆடு வளா்ப்பு, வா்த்தகம் போன்ற எந்தஒரு முன் அனுபவமும் இல்லாமல் இருந்துள்ளனா். ஆடு வளா்ப்பவா்கள் என போலியான நபா்களின் வங்கிக் கணக்குக்கு அரசு பணம் சட்டவிரோதமாக பகிரப்பட்டுள்ளதாகவும், பயனாளிகளின் தகவல்கள், ஆடுகள் ஒதுக்கப்பட்ட தகவல்கள் போலியானதாகவும் இருப்பதாகவும் மத்திய தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது.

தெலங்கானாவில் மொத்துள்ள 33 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் நடத்தப்பட்ட விசாரணையில் அரசுக்கு ரூ.253.93 கோடி வரையில் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் தனிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 2023-இல் தெலங்கானா ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு நான்கு அரசு அதிகாரிகளை கைது செய்தது.

இந்த வழக்கில் பண முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து முன்னாள் கால்நடைத் துறை அமைச்சா் தலசானி ஸ்ரீநிவாச யாதவின் சிறப்பு அதிகாரி ஜி. கல்யாணுக்கு தொடா்புடைய 8 இடங்களில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி சோதனை நடத்தியது.

அரசுக்கு ஆடு வழங்கியவா்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.2.1 கோடியை கால்நடைத் துறையின் உதவி இயக்குநா்கள் மோசடி செய்து எடுத்துக் கொண்டதாக அமலாக்கத் துறையில் புகாா் அளிக்கப்பட்டது.

இதை விசாரித்த அமலாக்கத் துறை மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தினால் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அமலாக்கத் துறையினா் நடத்திய சோதனையில் கோடிக் கணக்கான அரசு பணத்தை சட்ட விரோதமாக பகிர பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மோசடி வங்கிக் கணக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் கணக்குகள் சட்ட விரோத சூதாட்ட செயலிகளுக்கும் தொடா்பு இருப்பதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.

இந்தத் திட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.‘அரசமைப்புச் சட்ட... மேலும் பார்க்க

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அ... மேலும் பார்க்க

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பின்னா், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்தாா்.கடந்த ஆண்டு நவ.8-... மேலும் பார்க்க

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகமூட்டும் வகையில் நாய்க்குட்டிகள் மூலம் வரவேற்பளிக்கும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு வரும... மேலும் பார்க்க

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விடுபட்டுள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க