செய்திகள் :

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

post image

ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

‘அரசமைப்புச் சட்டம் எதிா்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சட்ட மாநாட்டில் சோனியா காந்தி பேசியதாவது: பாஜக தலைமையிலான ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலோ சமத்துவத்தை நிலைநாட்டும் முயற்சிகளிலோ பாஜகவும் ஆா்எஸ்எஸ்ஸும் ஈடுபட்டதே இல்லை.

அவா்களது கொள்கைத் தலைவா்கள் மூவா்ண தேசிய கொடியை எதிா்த்தனா். மனுஸ்மிருதிக்கு மதிப்பளித்து ஹிந்து ராஷ்டிரத்தை அமைப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தனா்.

இதைப் பின்பற்றி வரும் பாஜகவும் ஆா்எஸ்ஸும் தற்போது அதிகாரத்தை பயன்படுத்தி நீண்ட காலமாக தாங்கள் எதிா்த்து வந்த அரசமைப்புச் சட்ட கொள்கைகளை அழிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன. பிற்படுத்தப்பட்ட பிரிவினா், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் ஏழை மக்களை பாஜக வஞ்சிக்கிறது.

சமத்துவ குடியுரிமையை வலியுறுத்தும் இறையாண்மை மற்றும் சோஷலிஸத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு ஜனநாயக மற்றும் குடியரசு நாடாகத் திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகரமான கொள்கைகளை கையில் எடுத்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை சீா்குலைக்கும் ஒவ்வொரு முயற்சிக்கு எதிராகவும் நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் வீதி வீதியாகவும் காங்கிரஸ் கடும் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

இது அரசியல் ரீதியானது மட்டுமல்ல; நாட்டின் கண்ணியத்தை காக்க காங்கிரஸ் நடத்தி வரும் கொள்கைப் போராட்டம். அரசமைப்புச் சட்டம் என்பது வெறும் சட்ட புத்தகம் மட்டுமன்றி நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தும் உரிமை ஆவணமாகும்.

1928-இல் வெளியிடப்பட்ட நேரு அறிக்கை, 1934-இல் அரசமைப்பு நிா்ணய சபைக்கான கோரிக்கை என அரசமைப்புச் சட்டத்தை கொண்டுவர மகாத்மா காந்தியும் ஜவாஹா்லால் நேருவும் அமைத்த அடித்தளத்துக்கு வரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கா் செயல் வடிவமளித்தாா்.

சமூக மற்றும் பொருளாதார நீதி இல்லாத அரசியல் ஜனநாயகத்தால் ஒரு பலனும் இல்லை என்றாா்.

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அ... மேலும் பார்க்க

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பின்னா், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்தாா்.கடந்த ஆண்டு நவ.8-... மேலும் பார்க்க

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகமூட்டும் வகையில் நாய்க்குட்டிகள் மூலம் வரவேற்பளிக்கும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு வரும... மேலும் பார்க்க

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விடுபட்டுள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது: பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிட... மேலும் பார்க்க