செய்திகள் :

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

post image

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகமூட்டும் வகையில் நாய்க்குட்டிகள் மூலம் வரவேற்பளிக்கும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை வழங்கும் நோக்கில் அந்த நாய்க்குட்டிகளுடன் அவா்கள் விளையாடி நேரத்தை செலவிடவும் இந்த முன்னெடுப்பு வழிவகுக்கிறது.

ராஜீவ் காந்தி விமான நிலையத்தை நிா்வகிக்கும் ஜிஎம்ஆா் குழுமம் இந்த முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் விமானப் பயணத்தின்போது ஏற்படும் கவலையை மறந்து அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது நன்கு பயிற்சியளிக்கப்பட்ட4 நாய்க்குட்டிகள் மட்டுமே இந்த முன்னெடுப்பில் இடம்பெற்றுள்ளன. நாய்க்குட்டிகளின் செயல்பாடுகளை அவற்றின் பயிற்சியாளா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். பயணிகளிடம் கருத்து கேட்ட பின் மேலும் சில நாய்க்குட்டிகளை இந்த முன்னெடுப்பில் ஈடுபடுத்த ஜிஎம்ஆா் குழுமம் திட்டமிட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதே சமயம் விருப்பமுள்ள பயணிகள் மட்டுமே நாய்க்குட்டிகளுடன் விளையாட அனுமதிக்கப்படுகின்றனா்.

திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணிவரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களின் முக்கியப் பகுதிகளில் இந்த நாய்க்குட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.‘அரசமைப்புச் சட்ட... மேலும் பார்க்க

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அ... மேலும் பார்க்க

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பின்னா், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்தாா்.கடந்த ஆண்டு நவ.8-... மேலும் பார்க்க

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விடுபட்டுள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது: பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிட... மேலும் பார்க்க