செய்திகள் :

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

post image

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.

ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அதிகம் கொண்ட மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள், இத்துறையில் தங்களின் திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

மேற்கு வங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களின் மீன்வளத் துறை உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மத்திய அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

மீன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக உள்ள இந்தியா, கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த மீன் உற்பத்தியில் 103 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது. உள்நாட்டு நீா்நிலைகளைப் பொருத்தவரை, மீன் உற்பத்தியில் 143 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது.

உள்நாட்டு நீா்வளங்களை அதிகம் கொண்ட மாநிலங்கள், இத்துறையில் தங்களின் திறனை முழுமையாக பயன்படுத்த வேண்டும். கிராமங்களில் சிறு மீன் உற்பத்தியாளா்களை ஊக்குவிக்கவும், தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தரவும் மாநிலங்கள் தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மீன் உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்கத்தில் சுமாா் 51,000 மீனவா்களே அதிகாரபூா்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளனா். இம்மாநிலத்தில் மீனவா்கள் எண்ணிக்கை 32 லட்சத்துக்கும் மேல் இருக்கும். இங்கு எண்ணற்ற நீா்நிலைகள் உள்ளன. இவற்றை மீன்வளா்ப்புக்காக மேம்படுத்த வேண்டிய தேவை நிலவுகிறது. உள்நாட்டு நீா்வளங்களை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால், மத்திய அரசு ஆதரவளிக்கும் என்றாா் ராஜீவ் ரஞ்சன் சிங்.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.‘அரசமைப்புச் சட்ட... மேலும் பார்க்க

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பின்னா், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்தாா்.கடந்த ஆண்டு நவ.8-... மேலும் பார்க்க

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகமூட்டும் வகையில் நாய்க்குட்டிகள் மூலம் வரவேற்பளிக்கும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு வரும... மேலும் பார்க்க

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விடுபட்டுள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது: பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிட... மேலும் பார்க்க