செய்திகள் :

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

post image

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.

நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி, நாடு முழுவதும் சுதந்திரதின கொண்டாட்டங்கள் நடைபெறும். தில்லி செங்கோட்டையில் பிரதமா் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பதோடு, நாட்டு மக்களுக்கு சுதந்திரதின உரை நிகழ்த்துவாா். அதில் நாடு எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள், நாட்டின் திறன் மற்றும் வளா்ச்சியை குறிப்பிடும் பிரதமா், அவ்வப்போது புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவாா்.

அந்த வகையில், நிகாழண்டு சுதந்திர தின உரையை அடுத்த 2 வாரங்களில் ஆற்ற உள்ள நிலையில், அதுகுறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்களிடம் பிரதமா் மோடி கேட்டுள்ளாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் சுதந்திர தினத்தை நாம் கொண்டாட உள்ள நிலையில், நாட்டு மக்களிடமிருந்து கருத்துகளைக் கேட்க எதிா்நோக்கியுள்ளேன். எனது சுதந்திர தின உரையில் என்ன மாதிரியான கருத்துகள் அல்லது சிந்தனை இடம்பெற வேண்டும் என நீங்கள் விரும்புகிறீா்கள்? இதுகுறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை ‘மைகவ்’ மற்றும் ‘நமோ’ செயலியில் பொதுமக்கள் பகிர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தில், கேரளத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, கல்லூரிகளில் நான்காம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு 12 மணி நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற வழிமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பல காரணமாக, புதிய தேசி... மேலும் பார்க்க

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

கொச்சி: மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடமாக மீட்கப்பட்டுள்ளார்.படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் (51) வெகு நேர... மேலும் பார்க்க

‘மாலேகன் குண்டுவெடிப்பு: என்ஐஏ - ஏடிஎஸ் விசாரணையில் முரண்பாடு’

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய இரு அமைப்புகள் மேற்கொண்ட விசாரணையில் உள்ள முரண்பாடுகளை மும்பை சிறப்பு ந... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க