செய்திகள் :

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

post image

எப்போதும் தொண்டர் படைசூழ, பாதுகாவலர்களின் உதவியோடு வெளியே வரும் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, நேற்று நீதிமன்றத்தில் தனியாகவே காணப்பட்டார்.

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை விடியோ எடுத்து மிரட்டியதாகத் தொடரப்பட்ட பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

மிகப்பெரிய அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், பிரஜ்வல் ரேவண்ணா, எப்போதும் ஆதரவாளர்களின் புடைசூழ வெளியே வருவார். ஆனால், நேற்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்கூட அவருடன் இல்லை.

தனது இக்கட்டான நாள்களை, பிரஜ்வல் ரேவண்ணா தனியாகவே சந்திக்கவிருக்கிறார். நீல நிற சட்டை, ஜீன்ஸ் பேண்டுடன் நீதிமன்றத்துக்கு தனியாக வந்திருந்த பிரஜ்வல் ரேவண்ணா, தனது வழக்குரைஞர்களிடம் எந்தவிதமான தீர்ப்பு வரும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

பிறகு, நீதிபதி தீர்ப்பை வாசித்தபோது, பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி, அவருக்கான தண்டனை விவரங்களை நாளை அறிவிக்கிறேன் என்றார்.

இதைக் கேட்டதும் பிரஜ்வல் ரேவண்ணாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது முகம் முழுக்க வேதனையால் துவண்டது. தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டார். பிறகு தன்னுடைய கைகளால் முகத்தை மூடிக்கொண்டார். கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரை அடக்கிக்கொண்டு வெளியே வந்தார். அப்போது அவருடன் குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் கூட இல்லை என்பதை அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று வழக்குரைஞர்கள் பிரஜ்வல் ரேவண்ணாவைத் தேற்றிக் கொண்டிருந்தனர். இந்த தீர்ப்பைக் கேட்டு கட்சித் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு அரசியல் தலைவர் தொடர்புடைய வழக்கில், இவ்வளவு விரைவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று(ஆக. 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.வீட்டுப் பணிப்... மேலும் பார்க்க

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் மூவரின் சடலம் கண்டெக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் எஸ்பி சதீஷ் யாதவ் கூறுகையில், பரத்பூ... மேலும் பார்க்க

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

சத்தீஸ்கரில் மதமாற்றம் செய்ய முற்பற்றதாக கன்னியாஸ்திரிகளை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் சிறுமிகள் மூவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவர்களை மதமாற்றம் செய்ய முற்பற்றதாக எழு... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

பிகார் வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்திற்க... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

பிகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தன்னிடம் வைத்திருப்பதாகக் கூறப்படும் ஆதாரங்களின் அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சவால் விடு... மேலும் பார்க்க

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

கடவுள் சிவனின் ஆக்ரோஷமான ருத்ர தாண்டவத்தை, இந்தியா, பயங்கரவாதத்துக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்தூருடன் ஒப்பிட்டுப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியா தன்னுடைய ருத்ர தாண்ட... மேலும் பார்க்க