செய்திகள் :

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

post image

பிகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தன்னிடம் வைத்திருப்பதாகக் கூறப்படும் ஆதாரங்களின் அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சவால் விடுத்துள்ளார்.

மாநில தலைநகரில் ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்த விழாவில் உரையாற்றிய ராஜ்நாத் சிங் கூறுகையில்,

பிகாரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறுக்கு வழி. அதில் என்டிஏ கீழ் ஒரு பாதை மேலும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அதேசமயம் மற்றொரு பாதை இந்தியா கூட்டணியின் கீழ் மாநிலத்தை அதன் பழைய நிலைக்கு அதாவது நீதியின்மை மற்றும் ஜாதி மோதலுக்குக் கொண்டு செல்லும். மாநிலத்தை எந்தவழியில் கொண்டுசெல்வது என்பது மக்கள் கையில்தான் உள்ளது.

ராகுல்காந்தி தன்னிடம் ஒரு அணுகுண்டு இருப்பதாகக் கூறுகிறார். அப்படியானால் அவர் உடனடியாக அதை வெடிக்கச் செய்து, தன்னை ஆபத்திலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும்.

முன்னதாக, ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பூகம்பம் வெடிக்கும் என்று மிரட்டினார், ஆனால் அவரின் நாடாளுமன்ற உரையில் அது ஈரமான பொய்யாக மாறியது.

இந்தியத் தேர்தல் ஆணையம் கேள்விக்கு இடமில்லாத நேர்மைக்கு நற்பெயரைக் கொண்ட ஒரு நிறுவனம். மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

அரசியலமைப்பு அமைப்பு குறித்து அற்பமான அறிக்கைகளை வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவருக்குப் பொருந்தாது. அவரது சொந்தக் கட்சியின் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளது என காங்கிரஸ் தலைவருக்கு அவர் நினைவூட்டினார். இவ்வாறு அவர் பேசினார்.

Defence Minister Rajnath Singh on Saturday slammed Congress leader Rahul Gandhi for claiming to have an “atom bomb of evidence” which would prove that the Election Commission was committing “vote theft” in Bihar.

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம் இருப்பதையடுத்து வெளியூர்களுக்குச் செல்ல மக்கள் அதிகம் பேர் விரும்புவதால் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.ஆகஸ்ட்டில், குறிப்பிட்ட சில உள்ளூர் விமான சேவைகளின... மேலும் பார்க்க

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைய... மேலும் பார்க்க

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

பஞ்சாபில் நகையை பறித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கார் மீது மோதியதில் 12 வயது சிறுவன் பலியானான். பஞ்சாப் மாநிலம், பட்டி சுரா சிங் கிராமத்தைச் அமன்தீப் கௌர் மற்றும் அவரது கணவர் ரஞ்சி... மேலும் பார்க்க

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்... மேலும் பார்க்க

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்ல ரக்‌ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்ப... மேலும் பார்க்க