செய்திகள் :

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

post image

பிகார் வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறிவருகிறார்.

இந்நிலையில் பிகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

பாட்னாவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "நேற்று(வெள்ளிக்கிழமை) பிகாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது கணக்கெடுப்பு படிவத்தை நான் நிரப்பி கொடுத்தேன். பட்டியலில் பெயரே இல்லாதபோது நான் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்?

என்னுடைய வாக்காளர் அட்டை எண்ணைக் கொண்டு விவரங்களைத் தேடியபோது எதுவுமே கிடைக்கவில்லை. பூத் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் என்னுடைய படிவத்தை வாங்கிச் சென்றார்கள். எனினும் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை.

ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மொத்த எண்ணிக்கையில் சுமார் 8.5% பேர் அதாவது 65 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

அவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள், வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டார்கள், போலி வாக்காளர் அட்டை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.

தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள நீக்கப்பட்டவர்களின் பட்டியலில் முகவரி, பூத் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் என எதுவும் இல்லை. இதனால் யார் பெயரை எல்லாம் நீக்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்.

ஆனால் தேஜஸ்வி யாதவின் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறி அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

RJD leader Tejashwi Yadav asks that his name is not there in the electoral roll. How will contest the elections?

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைய... மேலும் பார்க்க

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

பஞ்சாபில் நகையை பறித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கார் மீது மோதியதில் 12 வயது சிறுவன் பலியானான். பஞ்சாப் மாநிலம், பட்டி சுரா சிங் கிராமத்தைச் அமன்தீப் கௌர் மற்றும் அவரது கணவர் ரஞ்சி... மேலும் பார்க்க

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்... மேலும் பார்க்க

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்ல ரக்‌ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்ப... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று(ஆக. 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.வீட்டுப் பணிப்... மேலும் பார்க்க